எழுத்துக்களால் வர்ணிக்க முடியாத இழப்புக்களையும் உயிரிழப்புக்களையும் சந்தித்து சொத்துக்களையும் இழந்துள்ள நிலையில் தம்முடைய சொந்த பூமிக்கு திரும்புகின்ற மகிழ்ச்சியை, மேம்படுத்துகின்ற இந்த காசா மக்களுடைய உணர்வுகளை என்னவென்று சொல்வது?
தம்முடைய பூமியின் மீது கொண்டிருக்கின்ற அந்த உணர்வும் அங்கே வாழ வேண்டும், அதனை மீட்க வேண்டும், பாதுகாக்க வேண்டும், என்ற அந்த உணர்வும் எல்லா நேரங்களிலும் அந்த மக்களிடம் மேலோங்கி இருப்பதை அங்கிருந்து வருகின்ற ஒவ்வொரு செய்தியும் நமக்கு காட்டிக் கொண்டிருக்கின்றது.
இந்த காணொளியில் உள்ள பெண் தன் சொந்த இருப்பிடத்துக்கு மீண்டும் திரும்புவதற்கான சூழலை தந்த அல்லாஹ்வுக்கும் ஹமாஸ் அமைப்பின் இராணுவ படையான அல்-கஸ்ஸாம் பிரிவுக்கும் நன்றி செலுத்துகின்ற உணர்வு பூர்வமான காட்சியே இது.