பாதுகாப்பைப் பலப்படுத்துவது தொடர்பில் இலங்கை – மியன்மார் இராணுவ அதிகாரிகள் கலந்துரையாடல்

Date:

இலங்கையில் உள்ள மியன்மார் தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகர் பிரிகேடியர் ஜெனரல் சாவ் மோ எல்வின், நேற்று (28) கோட்டே, ஸ்ரீ ஜயவர்தனபுரவில் உள்ள பாதுகாப்பு அமைச்சில் பாதுகாப்பு செயலாளர் ஏர் வைஸ் மார்ஷல் சம்பத் துயகோந்தாவை (ஓய்வு) சந்தித்தார்.

இந்தச் சந்திப்பின் போது, ​​இரு அதிகாரிகளும் பரஸ்பர ஆர்வமுள்ள விஷயங்கள் குறித்து சுமுகமான கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.

மேலும் இலங்கைக்கும் மியன்மாருக்கும் இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதற்கான வழிகளையும் ஆராய்ந்தனர்.

கடல்சார் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு பயிற்சித் திட்டங்கள் போன்ற துறைகளில் ஒத்துழைப்பது தொடர்பில் குறிப்பாக கவனம் செலுத்தப்பட்டதோடு , இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால உறவுகளை வலுப்படுத்துவது தொடர்பிலும் இந்த கலந்துரையாடலில் வலியுறுத்தபட்டது.

இந்த முக்கிய துறைகளில் கூட்டாகச் செயல்படுவதற்கான சாத்தியக்கூறுகளை பிரிகேடியர் ஜெனரல் எல்வின் எடுத்துரைத்தார், இரு நாடுகளுக்கும் இடையிலான மூலோபாய ஒத்துழைப்பின் முக்கியத்துவத்தை வலுப்படுத்துவதாக இந்தச் சந்திப்பு அமைந்திருந்ததாக பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.

இரு நாடுகளுக்கும் இடையிலான நல்லெண்ணம் மற்றும் பரஸ்பர மரியாதையின் அடையாளமாக நினைவுச் சின்னங்களும் பரிமாறப்பட்டன.

பாதுகாப்பு அமைச்சின் இராணுவ தொடர்பு அதிகாரியும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டார்.

மியன்மாரில் இருந்து ரோஹிங்கியர்கள் இலங்கையில் தஞ்சமடைந்துள்ள நிலையில் இந்தச் சந்திப்பு நடந்துள்ளது. மேலும் ஓரிலட்சம் ரோஹிங்கியர்கள் இலங்கை வரவிருப்பதாக புலனாய்வுத் தகவல் கிடைத்திருப்பதாக முன்னதாக இலங்கை ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.

 

 

Popular

More like this
Related

பல்கலைக்கழக பிரவேசத்திற்கான விண்ணப்பங்கள் மே 19 வரை நீடிப்பு

2025/2026 ஆம் கல்வியாண்டிற்கான பல்கலைக்கழக பிரவேசத்திற்கு விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு மே மாதம்...

மின்சாரக் கட்டணத் திருத்தம் குறித்த பொதுமக்களின் கருத்துக்கேட்பு இன்று

2026 ஆம் ஆண்டுக்கான முன்மொழியப்பட்ட விசேட மின்சாரக் கட்டணத் திருத்தம் குறித்த...

சில இடங்களில் 100 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும்

அயன மண்டலங்களுக்கு இடையிலான ஒடுங்கும் வலயத்தின் (ITCZ) தாக்கமும்  மற்றும் இலங்கைக்கு...

கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கு: ‘தெமட்டகொட சமிந்த’விடம் வாக்குமூலம் பெற நீதிமன்றம் அனுமதி!

பாதாள உலகக் குழுவின் முக்கிய தலைவரான கணேமுல்ல சஞ்சீவ கொல்லப்பட்ட சம்பவம்...