முன்மாதிரியான மனிதரை சமூகம் இழந்துள்ளது: அஷ்ஷெய்க் அப்துல்லாஹ் மஹ்மூத் அவர்களின் மறைவுக்கு ஜம்இய்யத்துல் உலமா புத்தளம் நகரக் கிளை அனுதாபம்

Date:

மறைந்த அஷ்ஷெய்க் அப்துல்லாஹ் மஹ்மூத் ஆலிம் அவர்களிடம் இருந்த சிறந்த குணம், ஒழுக்கம், உபசரிப்பு மற்றும் மாற்று மத சகோதரர்களை அனுகும் விடயங்களை கவனிக்கும் போது ஒரு முன்மாதிரியான மனிதரை சமூகம் இழந்து நிற்கிறது.

அவருக்கு நிகர் அவரே அவரின் இழப்பு நாட்டிற்கும் சமூகத்திற்கும் குறிப்பாக புத்தளத்திற்கும் ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும் என அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா புத்தளம் நகரக் கிளை தனது அனுதாபச்செய்தியில் குறிப்பிட்டுள்ளது.

மேலும் 30 வருடம் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா புத்தளம் நகரக் கிளை மற்றும் புத்தளம் மாவட்டத்தை வழி நடாத்திய முன்னாள் தலைவராகவும் தற்போதய நிறைவேற்றுக் குழவின் உயர்பீட உறுப்பினராகவும் 15 வருடம் சர்வ மதக் குழுவின் சமயத் தலைவராகவும் புத்தளம் காஸிமிய்யா அரபுக் கல்லூரியின் முன்னாள் அதிபராகவும் இருந்து பல சேவைகளை நாட்டிற்கும் புத்தளத்திற்கும் ஆற்றிய அப்துல்லாஹ் மஹ்மூத் ஆலிம் அவர்கள் (13) இறையழைப்பை ஏற்றுக் கொண்டார்கள்.

உலமாக்களை பாராட்டி ஊக்குவிப்பதிலும் நிர்வாக மற்றும் அரசியல் முறைமைகளை கையாளுவதிலும் அவர்கள் முன்னோடியாகத் திகழ்ந்தார்கள்.

அன்னாரின் குடும்பத்திற்கு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா புத்தளம் நகரக் கிளை அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறது.

 

 

 

 

 

 

Popular

More like this
Related

அதிகரிக்கும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை

இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 9 லட்சத்திற்கும் அதிக சுற்றுலாப் பயணிகள்...

வியட்நாம் ஜனாதிபதியின் இலங்கை விஜயம் நிறைவு

இலங்கைக்கான அரச விஜயத்தை வெற்றிகரமாக நிறைவு செய்த வியட்நாம் சோசலிசக் குடியரசின்...

நாட்டில் தற்போது நிலவும் மழை நிலைமை தொடரும்.

நாட்டில் தற்போது நிலவும் மழை நிலைமை அடுத்த சில நாட்களுக்கு மேலும்...

கபில சந்திரசேனவின் மரணம் குறித்து பொலிஸார் நீதிமன்றில் அறிக்கை!

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேன...