வெளிநாட்டு உயர் கல்வி தொடர்பான இலவச கருத்தரங்கும் கண்காட்சியும்

Date:

வெளிநாட்டு உயர் கல்வி தொடர்பாக விரும்பும் மாணவர்களுக்கான இலவச கருத்தரங்கும் கண்காட்சியும் எதிர்வரும் 01ஆம் திகதி காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை  கொழும்பு வௌ்ளவத்தையில் உள்ள சபையர் ஹொட்டலில் (Hotel Sapphire) நடைபெறவுள்ளது.

வௌிநாட்டு பல்கலைக்கழகங்களின் பிரதிநிதிகளின் பங்குபற்றலுடன் உயர் கல்வி முறையை மையமாகக் கொண்ட விசேட குழுவினர்களால் மாணவர்களுக்கு விளக்கமளிக்கப்படவுள்ளது.

குறித்த இலவச கருத்தரங்கில் இலங்கையில் உள்ள முன்னணி பல்கலைக்கழகங்கள் பங்குகொள்வதுடன், மாணவர்களுக்கு 25 முதல் 50 வீதமான புலமைப்பரிசில்களை வழங்கவுள்ளனர்.

இந்த நிகழ்வானது வெளிநாட்டில் கிடைக்கும் பரந்த கல்வி வாய்ப்புக்கள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதும், அவர்களின் உயர்கல்வி பயணத்தைத் தொடர்ந்து மாணவர்களுக்கு வழிகாட்டுதலை வழங்குவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.

உங்களுடைய தகைமை மற்றும் பெறுபேறுகளுடன் கருத்தரங்கிற்கு வருகை தாருங்கள். பங்கு கொள்ளும் மாணவர்களுக்கு இலவச பங்குபற்றல் சான்றிதழ் வழங்கப்படவுள்ளது.

Hybrid International Campus & Hybrid Visa Centre ஏற்பாட்டில் இக்கருத்தரங்கு இடம்பெறவுள்ளது.

 

 

 

Popular

More like this
Related

எல்லை நிர்ணயத்துக்கு புதிய குழுவை நியமிக்க அமைச்சரவை அங்கீகாரம்

எல்லை மீள் நிர்ணயத்துக்கென புதிய குழுவொன்றை நியமிப்பதற்கு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க...

பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயத்தினால் “யவ்ம்-இ-இஸ்தெஹ்சால்” தினம் கொழும்பில் அனுஷ்டிப்பு!

இந்திய சட்டவிரோத ஆக்கிரமிப்பு ஜம்மு மற்றும் காஷ்மீரில் ஆகஸ்ட் 5, 2019ல்...

5வது சவூதி ஊடக மன்றம் ரியாத் நகரில்: மன்னரின் அனுசரனையின் கீழ் உலக ஊடக மற்றும் தொழில்நுட்பத் துறையினர் ஒன்று கூடல்

எழுத்து- காலித் ரிஸ்வான் சவூதி அரேபியாவின் பரபரப்பான புதுமைகளின் தலைநகரான ரியாத் நகர்...

ஶ்ரீலங்கா ஜம்இய்யதுல் குர்ரா மற்றும் அல் மகாரிஉல் குர்ஆனிய்யா சங்கத்துக்கும் இடையே புரிந்துணர்வுஒப்பந்தம்!

கடந்த ஜூன் 20ஆம் திகதி மஸ்ஜிதுன் நபவியில் இடம்பெற்ற சந்திப்பின் போது...