இதுவே முதல் முறை: நான்கு இஸ்ரேலிய பணயக் கைதிகளின் உடல்களை ஒப்படைக்கும் ஹமாஸ்

Date:

தங்கள் பிடியில் உள்ள பணயக் கைதிகளில் கொல்லப்பட்ட 4 இஸ்ரேலியர்களின் உடல்களை ஹமாஸ் குழு  இன்று இஸ்ரேலிடம் ஒப்படைக்கிறது.

அதில், 4 வயது குழந்தை ஏரியல், 9 மாத கைக்குழந்தை கிபிர் மற்றும் இந்த குழந்தைகளின் தாயார் ஷிரி பிபஸ் 83 வயதான ஓடெட் லிஃப்ஷிட்ஸ் ஆகியோரின் உடல்களும் அடக்கம்.

கடந்த மாதம் போர்நிறுத்தம் தொடங்கியதிலிருந்து ஹமாஸ்  இறந்த பணயக் கைதிகளை ஒப்படைப்பது இதுவே முதல் முறை.

இதனை தொடர்ந்து வரும் சனிக்கிழமை இஸ்ரேலிய பணயக் கைதிகளில் மேலும் 6 பேரை விடுதலை செய்வதாக ஹமாஸ்  குழு தெரிவித்துள்ளது. இதற்கு ஈடாக இஸ்ரேல் சிறைகளில் உள்ள 300க்கும் மேற்பட்ட பலஸ்தீனியர்கள் விடுதலை செய்யப்பட உள்ளனர்.

இந்நிலையில், இஸ்ரேலிய பணயக் கைதிகள் அனைவரையும் ஒரேகட்டமாக விடுதலை செய்ய தயார் என்று ஹமாஸ் ஆயுதக்குழு தெரிவித்துள்ளது.

பணயக் கைதிகள் அனைவரையும் ஒரேகட்டமாக விடுதலை செய்ய தயாராக இருப்பதாகவும் அதற்கு ஈடாக காசாவில் நிரந்தரமாக போர் நிறுத்தம் அமல்படுத்தப்பட வேண்டுமென ஹமாஸ் தெரிவித்துள்ளது.

காசா முனையில் இருந்து இஸ்ரேல் படையினர் முழுமையாக வெளியேற வேண்டும் என ஹமாஸ் தெரிவித்துள்ளது.

அதேவேளை, பணயக் கைதிகள் மீட்பு, காசா முனையில் இருந்து ஹமாஸ்  குழுவை முழுமையாக அகற்றுவதே போரின் நோக்கம் என்று இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு தெரிவித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

‘கத்தார் ஹமாஸை மீண்டும் கொண்டு வரும்’: சவூதி அரேபியா எச்சரிக்கை.

இஸ்ரேலிய ஊடகமான "இஸ்ரேல் ஹயோம்' வெளியிட்ட செய்தி., சவூதி அரேபியா, ஐக்கிய அரபு...

பிரதமர் ஹரிணி நாளை இந்தியா விஜயம்

பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய நாளை இந்தியாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ள...

சுற்றுலாப் பயணிகளுக்கான வசதிகளை மேம்படுத்த பல திட்டங்கள்

எதிர்வரும் சுற்றுலாப் பருவத்தை இலக்காகக் கொண்டு சுற்றுலாப் பயணிகளின் வசதிகளை மேம்படுத்த...

நாட்டிற்கு அழைத்து வரப்படவுள்ள இஷாரா உட்பட 5 இலங்கையர்கள்

சஞ்சீவ குமார சமரரத்ன எனப்படும் 'கணேமுல்ல சஞ்சீவ' கொலை வழக்கில் முக்கிய...