இராணுவப்படைகளின் புதிய பிரதானியாக மேஜர் ஜெனரல் சந்தன விக்ரமசிங்க

Date:

இராணுவப்படைகளின் புதிய பிரதானியாக மேஜர் ஜெனரல் சந்தன விக்ரமசிங்க நியமிக்கப்பட்டுள்ளார்.

இம்மாதம் 9ஆம் திகதியிலிருந்து அமுலாகும் வகையில் இந்நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

இந்த நியமனத்திற்கு முன்பு மேஜர் ஜெனரல் சந்தன விக்ரமசிங்க, இராணுவப்படைகளின் துணை பிரதானியாகவும், அதற்கு முன்னர் இராணுவத் தலைமையகத்தில் பொதுப் பணியாளர் பணிப்பாளர் நாயகமாகவும் பணியாற்றினார்.

இந்திய இராணுவ கல்லூரி மற்றும் இலங்கை இராணுவ கல்லூரி ஆகியவற்றில் அடிப்படைப் பயிற்சியை முடித்த பின்னர் அவர் தனது இராணுவ வாழ்க்கையைத் தொடங்கினார்.

பின்னர் அவர் இரண்டாவது லெப்டினன்ட்டாக நியமிக்கப்பட்டு கஜபா படைப்பிரிவில் காலாட்படை அதிகாரியாக நியமிக்கப்பட்டார். அத்தோடு இராணுவ ஊடக பணிப்பாளராகவும் பேச்சாளராகவும் கடமையாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

பாகிஸ்தானை ஜனநாயக இஸ்லாமிய நலன்புரி நாடாக மாற்றுதல் என்ற தொனிப்பொருளில் கொழும்பில் நடைபெற்ற பாகிஸ்தானின் சுதந்திர தின நிகழ்வு

பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலயம் இலங்கையிலுள்ள பாகிஸ்தான் சமூகத்தினருடன் இணைந்து பாகிஸ்தானை வலுவான,...

கல்வியில் எதிர்பார்க்கப்படும் இலக்குகளை அடைந்துகொள்வதற்கான தன்னார்வ ஆலோசனை சபை நியமனம்: துறைசார்ந்த முஸ்லிம்கள் எவரும் இல்லை!

கல்வித் துறையில் தரமான வளர்ச்சியை ஏற்படுத்தும் நோக்கிலான புதிய அரசாங்கத்தின் கொள்கைகளுக்கு...

‘செம்மணி’ நூல் வெளியீடும் கலந்துரையாடலும் இன்று..!

தரிந்து ஜயவர்தன, தரிந்து உடுவரகெதர மற்றும் எம்.எப்.எம்.பஸீர் ஆகியோர் இணைந்து எழுதிய...