உள்ளூராட்சி தேர்தல் சட்டமூலம் பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றம்!

Date:

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் சிறப்பு ஏற்பாடுகள் சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு  நாடாளுமன்றத்தில் சிறப்பு பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இதற்கு ஆதரவாக 187 வாக்குகளும் பதிவுசெய்யப்பட்டதுடன் எந்த நாடாளுமன்ற உறுப்பினரும் சட்டமூலத்திற்கு எதிராக வாக்களிக்கவில்லை.

அதனை தொடர்ந்து உள்ளூராட்சி மன்றத் தேர்தல் (சிறப்பு ஏற்பாடுகள்) சட்டமூலத்தின் மூன்றாவது வாசிப்பு எனப்படும் குழு நிலை விவாதம் ஆரம்பமானது.

இதில் சட்டமூலத்திற்கு ஆதரவாக 158 வாக்குகள் பதிவாகியிருந்த நிலையில் எதிராக வாக்குகள் எதுவும் பதிவாகவில்லை.

அதன்படி, உள்ளூராட்சி மன்றத் தேர்தல் (சிறப்பு ஏற்பாடுகள்) சட்டமூலம் திருத்தம் இல்லாமல் சிறப்பு பெரும்பான்மையால் நிறைவேற்றப்பட்டதாக சபாநாயகர் சபைக்குத் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் அதிகரிப்பு

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் இன்று (21) நள்ளிரவு 12.00 மணி முதல்...

உலக நாடுகளின் எரிபொருள் விலையேற்றம்

அண்மையில் வெளியான உலக எரிபொருள் விலையேற்றத்திற்கமைய பல நாடுகளில் 20 வீதத்திற்கும்...

இலங்கைக்கான சவூதி அரேபியத் தூதுவரின் பெருநாள் வாழ்த்துச் செய்தி

புனித ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளை முன்னிட்டு, இலங்கைக்கான சவூதி அரேபியத்...

ஜனாதிபதியின் ஈகைத் திருநாள் வாழ்த்துச் செய்தி!

உலகெங்கிலும் உள்ள முஸ்லிங்கள் ஒரு மாதம் முழுவதும் நோன்பு நோற்று, அதன்...