எமது நாட்டின் வளர்ச்சி இளைஞர்களின் திறன்களுடன் இணைக்கப்பட்டுள்ளது: முஸ்லிம் லீக் வாலிப முன்னணிகள் சம்மேளனத்தின் சுதந்திர தின செய்தி

Date:

இலங்கையின் 77ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு, அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணிகள் சம்மேளனம் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தி

இலங்கையின் 77ஆவது சுதந்திர தின நன்நாளில், அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணிகள் சம்மேளனம், உள்ளூர் மற்றும் வெளிநாடுகளில் வசிக்கும் அனைத்து இலங்கையர்களுக்கும் தனது அன்பான வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதில் பெருமிதம் கொள்கின்றது.

ஜனநாயகம், பன்முகத்தன்மை மற்றும் உள்ளடக்கிய தன்மையால் வடிவமைக்கப்பட்ட நமது நாட்டின் நீண்ட பயணத்தை நினைவுகூரும் ஒரு சந்தர்ப்பம் இதுவாகும்.

எமது நாடு மக்களின் பலத்தின் அடிப்படையில் எழுந்துள்ளது. எனவே, அமைதி, சாந்தி, சமாதானம், ஒற்றுமை மற்றும் முன்னேற்றத்தை ஊக்குவிப்பது நம் அனைவரின் பொறுப்பாகும்.

கடந்த ஐந்து தசாப்தங்களாக, அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணிகள் சம்மேளனம் இளைஞர்களின் எதிர்காலத்தைக் கட்டியெழுப்புவதில் உறுதியாக இருக்கின்றது.

நமது நாட்டின் வளர்ச்சி இளைஞர்களின் திறன்களுடன் நேரடியாக இணைக்கப்பட்டுள்ளது என்பதை நாங்கள் உறுதியாக நம்புகிறோம். கல்வி, தலைமைத்துவம் மற்றும் சமூக சேவை மூலம், நாட்டின் வளர்ச்சிக்கு இளைஞர்கள் மிகவும் அர்த்தமுள்ள பங்களிப்புகளைச் செய்ய நாங்கள் வழிகாட்டுகிறோம்.

சுதந்திர தினத்தைக் கொண்டாடும் இந்த சந்தர்ப்பத்தில், நீதி, சமத்துவம் மற்றும் சகவாழ்வு கொண்ட இலங்கையை உருவாக்குவதற்கான நமது உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்துவோம். தேசிய மற்றும் மத வேறுபாடுகளைக் கடந்து ஜனநாயகம், பொருளாதார வளர்ச்சி மற்றும் சமூக நல்லிணக்கத்தை வலுப்படுத்த நாம் ஒன்றிணைந்து செயற்படுவோம்.

இந்த சுதந்திர தினம் உங்களுக்கு புதிய நம்பிக்கை, ஒற்றுமை மற்றும் தைரியத்தைக் கொண்டுவரட்டும். அனைவரும் ஒன்றாக இணைந்து, ஒரு வலுவான மற்றும் பலமான இலங்கையை உருவாக்குவோம்.

 

எம்.என்.எம். ஷாம் நவாஸ்
தேசிய தலைவர்
அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணிகள் சம்மேளனம்

Popular

More like this
Related

இந்திய பொருளாதாரம், கல்வி, கலாச்சார அனுபவங்களை பகிர்ந்த இலங்கை இளம் அரசியல் தலைவர்கள்!

இந்திய அரசு, இந்திய வெளிவிவகார அமைச்சு மற்றும் இந்திய கலாச்சார உறவுகளுக்கான...

ஜனாதிபதி தலைமையில் உலக ஆதிவாசிகள் தின தேசிய கொண்டாட்டம்

உலக ஆதிவாசிகள் தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தேசிய வைபவம் ஜனாதிபதி...

காசாவைக் கைப்பற்றும் இஸ்ரேலின் திட்டம் குறித்து இலங்கை ஆழ்ந்த கவலை!

காசா நகரத்தின் கட்டுப்பாட்டைக் கைப்பற்ற இஸ்ரேல் எடுத்த முடிவு குறித்து இலங்கை...

முன்னாள் முதலமைச்சருக்கு ரூ.77 இலட்சத்திற்கும் அதிக மேலதிக எரிபொருள்:கோபா குழுவில் அம்பலமான தகவல்

2014-2017 காலப்பகுதியில் சப்ரகமுவ மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சருக்கு அனுமதிக்கப்பட்ட எரிபொருள்...