கட்டுப்பணத்தை மீளச் செலுத்த முடிவு:28 ஆம் திகதிக்கு முன்னர் விண்ணப்பிக்குமாறு வேண்டுகோள்

Date:

2023 ஆம் ஆண்டு நடத்தப்படவிருந்து ஒத்திவைக்கப்பட்ட உள்ளூராட்சி தேர்தலுக்காக கட்சிகளாலும் சுயாதீன வேட்பாளர்களாலும் செலுத்தப்பட்ட கட்டுப்பணத்தினை- திருப்பி செலுத்துவதற்கு நேற்றுமுன்தினம் (17) பாராளுமன்ற அமர்வில் நிறைவேற்றப்பட்ட 2025-1 ஆம் இலக்க உள்ளூராட்சி தேர்தல்கள் சட்டத்தின் 2(3) பிரிவுக்கு அமைய பற்றுச்சீட்டை முன்வைப்பதன் மூலம் கட்டுப் பணத்தை மீளச் செலுத்த வேண்டும் என குறித்துரைக்கப்பட்டுள்ளது.

அதன்படி பற்றுச்சீட்டையும் கட்டுப்பணத்தை மீளப்பெறுவதற்கான விண்ணப்பப் படிவத்தையும் கட்டுப்பணம் செலுத்திய மாவட்ட அலுவலகத்துக்கு இம்மாதம் 28 ஆம் திகதிக்கு முன்னர் கையளிக்குமாறு தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன்ஸ்ரீ ரத்நாயக்க வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இந்த ஒழுங்கில் விண்ணப்பங்களை சமர்ப்பித்தவர்களுக்கு அவர்களுடைய கட்டுப்பணத்தை உடனடியாக வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

உஸ்தாத் ஏ.ஸீ. அகார் முஹம்மத் எழுதிய ‘100 வாழ்க்கைப் பாடங்கள்’ நூல் வெளியீட்டு விழா இன்று மாலை BMICH இல்

தமிழ் உலகில் தனது பேச்சாலும் எழுத்துக்களாலும் மக்கள் மனம் கவர்ந்த மார்க்க...

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை: மேலதிக வகுப்புகளுக்கு நள்ளிரவு முதல் தடை!

2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையை கருத்திற்...

இலஞ்ச ஆணைக்குழுவினரால் சஷீந்திர ராஜபக்ஷ கைது

முன்னாள் விவசாய இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ, இலஞ்சம் அல்லது ஊழல்...

சில மாவட்டங்களில் அவ்வப்போது மழை பெய்யக் கூடிய சாத்தியம்

இன்றையதினம் (06) நாட்டின் மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மாகாணங்களிலும் காலி,...