ஜோன் கீல்ஸ் குழுமத்தின் முதலாவது இலங்கைத் தலைவர் கென் பாலேந்திரா காலமானார்

Date:

முன்னணி வணிகக் கூட்டு நிறுவனமான ஜோன் கீல்ஸ் குழுமத்தின் (John Keells Holdings Ltd) முதலாவது இலங்கைத் தலைவரான தேசமான்ய கந்தையா கென் பாலேந்திரா (Kandiah (Ken) Balendra) காலமானார்.

கென் பாலேந்திரா என்று எல்லோராலும் அறியப்பட்ட இலங்கையின் பிரபல தொழிலதிபர் தனது 85 வயதில் காலமானார்.

1940 பெப்ரவரி 3ஆம் திகதி பிறந்த இவர் நாட்டிலும் பிராந்தியத்திலும் ஏராளமான நிறுவனப் பதவிகளை வகித்துள்ளார்.

கந்தையா கென் பாலேந்திரா 1998ம் ஆண்டு  இலங்கையில் மிக உயர்ந்த கௌரவ விருதான தேசமாண்ய விருதை பெற்றுள்ளார்.

இதேவேளை, நாட்டின் மிகப்பெரிய கூட்டு நிறுவனமான ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸின் முதல் இலங்கைத் தலைவராகவும், பிராண்ட்ஸ் லங்கா மற்றும் காமன்வெல்த் மேம்பாட்டுக் கழகத்தின் தெற்காசிய பிராந்திய நிதியத்தின் தலைவராகவும் பணியாற்றியுள்ளார்.

கென் பாலேந்திரா ஜோன் கீல்ஸ் குழுமத்தின் தலைவராக திகழ்ந்து வர்த்தகத்துறையில் கொடிகட்டி பறந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Popular

More like this
Related

எல்லை நிர்ணயத்துக்கு புதிய குழுவை நியமிக்க அமைச்சரவை அங்கீகாரம்

எல்லை மீள் நிர்ணயத்துக்கென புதிய குழுவொன்றை நியமிப்பதற்கு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க...

பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயத்தினால் “யவ்ம்-இ-இஸ்தெஹ்சால்” தினம் கொழும்பில் அனுஷ்டிப்பு!

இந்திய சட்டவிரோத ஆக்கிரமிப்பு ஜம்மு மற்றும் காஷ்மீரில் ஆகஸ்ட் 5, 2019ல்...

5வது சவூதி ஊடக மன்றம் ரியாத் நகரில்: மன்னரின் அனுசரனையின் கீழ் உலக ஊடக மற்றும் தொழில்நுட்பத் துறையினர் ஒன்று கூடல்

எழுத்து- காலித் ரிஸ்வான் சவூதி அரேபியாவின் பரபரப்பான புதுமைகளின் தலைநகரான ரியாத் நகர்...

ஶ்ரீலங்கா ஜம்இய்யதுல் குர்ரா மற்றும் அல் மகாரிஉல் குர்ஆனிய்யா சங்கத்துக்கும் இடையே புரிந்துணர்வுஒப்பந்தம்!

கடந்த ஜூன் 20ஆம் திகதி மஸ்ஜிதுன் நபவியில் இடம்பெற்ற சந்திப்பின் போது...