பஷர் அல் ஆசாத்தின் ஆட்சிக்காலத்தில் சிரியாவின் விமான நிலைய சிறைச்சாலையில் 1000ற்கும் அதிகமானவர்கள் கொலை

Date:

சிரியாவின் முன்னாள் ஜனாதிபதி பஷர் அல் ஆசாத்தின் ஆட்சிக்காலத்தில் விமான நிலைய சிறைச்சாலையில் ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் சித்திரவதை செய்து கொலை செய்யப்பட்டதாக  சிரியா நீதி மற்றும் பொறுப்புக்கூறலிற்கான அமைப்பு  அறிக்கை வெளியிட்டுள்ளது.
 
சிரிய தலைநகர் டமஸ்கஸில் உள்ள இராணுவ விமான நிலையத்தின் சிறைச்சாலையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிரிய மக்கள் கொல்லப்பட்டனர், என தெரிவித்துள்ள இந்த அறிக்கை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்தவர்கள் சித்திரவதை செய்யப்பட்டு போதிய உணவு வழங்கப்படாமல்  கொல்லப்பட்டனர் என தெரிவித்துள்ளது.

ஏழு மனித புதைகுழிகளை ஆதாரமாக வைத்து இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

நேரில் பார்த்தவர்களின் வாக்குமூலங்கள் ,செய்மதி புகைப்படங்கள், ஜனாதிபதி அசாத் ஆட்சியிலிருந்து அகற்றப்பட்ட பின்னர் டமஸ்கஸின் புறநகர் பகுதியான மெசேவில் உள்ள இராணுவவிமானதளத்தில் மீட்கப்பட்ட படங்கள் போன்றவற்றை அடிப்படையாக வைத்து  மனித புதைகுழிகளை அடையாளம் கண்டதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

சில மனித புதைகுழிகள் விமானநிலையத்திற்குள் உள்ளன  ஏனைய மனித புதைகுழிகள் தலைநகரின் புறநகர்பகுதிகளில் உள்ளன என சிரியா நீதி மற்றும் பொறுப்புக்கூறலிற்கான அமைப்பு தெரிவித்துள்ளது.

விமான நிலையத்திலும் மயானமொன்றிலும் உள்ள இரண்டு இடங்களில் நீண்ட புதைகுழிகள் வெட்டப்பட்டமைக்கான அடையாளங்கள் காணப்படுகின்றன இவை நேரில் பார்த்தவர்களின் வாக்குமூலங்களுடன் பொருந்துகின்றன என அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

இந்த அறிக்கையை எழுதியவர்களில் ஒருவரான ஷாடி கரோன் தானும் இங்கு தடுத்துவைக்கப்பட்டிருந்ததாக தெரிவித்துள்ளார், ஆர்ப்பாட்டங்களை ஏற்பாடு செய்தமைக்காக 2011 முதல் 12வரை பல மாதங்கள் இந்தசிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டிருந்ததாகவும்  அவர் தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

‘உலக மக்கள் காசா பக்கம் நிற்கும் வரை இஸ்ரேல்-அமெரிக்காவின் சதி நிறைவேறாது”: இஸ்ரேலுக்கு எதிராக சென்னையில் நடைபெற்ற பேரணி!

சென்னையில் காசாவில் நிலவும் போரினை உடனடியாக நிறுத்த வலியுறுத்தி, பெரியாரிய உணர்வாளர்கள்...

2025(2026)சாதாரண பரீட்சைக்கான ONLINE விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன!

2025(2026) ஆம் ஆண்டிற்கான க.பொ.த சாதாரணதர பரீட்சைககு தோற்றுவதற்கான நிகழ்நிலை விண்ணப்பங்கள்...

இலங்கையில் அதிகரித்துள்ள இணையவழி துஷ்பிரயோகம்!

2025 ஆம் ஆண்டு இதுவரை, இணையவழி ஏமாற்றுதல் மூலம் 28 சிறுவர்களும்...

சவூதி- பாகிஸ்தான் ஒப்பந்தம்: இந்தியா உடனான உறவுகளை மனதில் வைத்து சவூதி செயல்படும் என நம்புவதாக இந்தியா தெரிவிப்பு.

சவூதி மற்றும் பாகிஸ்தான் இடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு கையெழுத்தான...