பிரபல பாதாள உலகக் குழுத் தலைவர் கணேமுல்ல சஞ்சீவ துப்பாக்கிச் சூட்டில் உயிரிழப்பு!

Date:

கொழும்பு புதுக்கடை நீதிமன்ற வளாகத்தில் இன்று மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் பிரபல பாதாள உலகக்  குழுத் தலைவரான ‘கணேமுல்ல சஞ்சீவ’ உயிரிழந்துள்ளார்.

கனேமுல்ல சஞ்சீவவை விசாரணை நடவடிக்கைகளுக்காக பூஸா சிறைச்சாலையிலிருந்து புதுக்கடை நீதிமன்றத்திற்கு அழைத்துவரப்பட்ட சந்தர்ப்பத்திலேயே குறித்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும், துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டவர் சட்டத்தரணியின் தோற்றத்தில் வருகைத் தந்திருந்ததாகவும் கூறப்படுகிறது.

குறித்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தின் போது அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிரிவி கமராவில் பதிவான காட்சிகள் தற்போது வௌியாகியுள்ளன.

2023  செப்டம்பர் 13, அன்று நேபாளத்திலிருந்து திரும்பியபோது கட்டுநாயக்கா  சர்வதேச விமான நிலையத்தில்  “கணேமுல்ல சஞ்சீவா” கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட நேரத்தில் அவரிடம் போலி பாஸ்போர்ட் இருந்ததுடன்,  தெமட்டகொட பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணின் தனிப்பட்ட விவரங்களும் இருந்தன.

சட்டவிரோதமாக படகு மூலம் இந்தியாவுக்குள் நுழைந்ததாக நம்பப்படும் “கணேமுல்ல சஞ்சீவா”, பின்னர் நேபாளத்திற்கு தப்பிச் சென்று, பின்னர் சர்வதேச ‘ரெட் வாரண்ட்’ சிவப்பு எச்சரிக்கை பிறப்பிக்கப்பட்ட பின்னர் இலங்கைக்குத் திரும்பியதாகக் கூறப்படுகிறது.

Popular

More like this
Related

நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் அதிகரிப்பு

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் இன்று (21) நள்ளிரவு 12.00 மணி முதல்...

உலக நாடுகளின் எரிபொருள் விலையேற்றம்

அண்மையில் வெளியான உலக எரிபொருள் விலையேற்றத்திற்கமைய பல நாடுகளில் 20 வீதத்திற்கும்...

இலங்கைக்கான சவூதி அரேபியத் தூதுவரின் பெருநாள் வாழ்த்துச் செய்தி

புனித ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளை முன்னிட்டு, இலங்கைக்கான சவூதி அரேபியத்...

ஜனாதிபதியின் ஈகைத் திருநாள் வாழ்த்துச் செய்தி!

உலகெங்கிலும் உள்ள முஸ்லிங்கள் ஒரு மாதம் முழுவதும் நோன்பு நோற்று, அதன்...