மின் விநியோகத் தடை தொடர்பில் முழுமையான விசாரணை..!

Date:

மின் விநியோகம் நேற்று (09) மாலை வழமைக்குத் திரும்பியுள்ளபோதும் அது தொடர்பில் முழுமையான விசாரணைகளை முன்னெடுக்கவுள்ளதாக மின் சக்தி மின்சக்தி அமைச்சர் குமார ஜயக்கொடி தெரிவித்தார்.

அதேவேளை மின் விநியோகத் தடை தொடர்பில் இன்று (10) முழுமையான தகவல்களை வழங்கவுள்ளதாக மின்சார சபையின் தலைவர்  திலக் சியம்பலாபிடிய தெரிவித்துள்ளார்.

அது தொடர்பில் மின்சார சபை உள்ளக குழுவொன்றை நியமித்து விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன் மின் சக்தி அமைச்சின் மூலமும் விரிவான விசாரணை மேற்கொள்ளப்படுவதாக அந்த அமைச்சின் செயலாளர் பேராசிரியர் உதயங்க ஹேமபால தெரிவித்துள்ளார்.

இனிமேல் இவ்வாறான நிலைமை ஏற்படுவதை தவிர்க்கும் வகையில் பரிந்துரைகளை அந்தக் குழு முன்வைக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

நாடளாவிய ரீதியில் இவ்வாறு பல சந்தர்ப்பங்களில் மின்சார துண்டிப்பு இடம்பெற்றுள்ளதுடன், 2023 ஆம் ஆண்டு டிசம்பர் 9ஆம் திகதி சீதுவை மின் கட்டமைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக 6 மணித்தியாலங்கள் மின் விநியோகத்தடை ஏற்பட்டமை குறிப்பிடத்தக்கது.

அத்துடன், 2016 ஆம் ஆண்டு மார்ச் மாதம், 2020 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 2021 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்திலும் இவ்வாறான நாடளாவிய ரீதியான மின் விநியோகத் தடை ஏற்பட்டமை குறிப்பிடத்தக்கது.

 

 

Popular

More like this
Related

தேசப் பற்றுக்கு நபிகளார் ஒரு குறியீடு: சுதந்திர தின விசேட கட்டுரை!

முஹம்மத் பகீஹுத்தீன் பிறந்த மண்ணையும் தேசத்தையும் நேசிப்பது மனிதனிடம் உள்ள ஒரு இயற்கையான...

இனவாதம் மற்றும் மதவாதம் அற்ற சமத்துவ சமூகமே எமது இலக்கு: பிரதமர் உறுதி.

78 ஆவது தேசிய சுதந்திர தினத்தை ஒரு புதிய சுதந்திரம் குறித்த...

பேரண்டப் பொருளாதார நன்மைகள் அனைத்து இன மக்களையும் சென்றடைய வேண்டும் – ஜனாதிபதி அநுர

கடந்த நூற்றாண்டில் தவறவிட்ட வெற்றிகளை நாட்டுக்குப் பெற்றுக்கொடுத்து, அனைவரினதும் கனவான, ‘வளமான...

புதிய கணக்காய்வாளர் நாயகமாக சமுதிகா ஜயரத்ன

சிரேஷ்ட பிரதி கணக்காய்வாளர் நாயகமாகப் பணியாற்றும் எல்.எஸ்.ஐ. ஜயரத்னவை புதிய கணக்காய்வாளர்...