இரத்தினபுரி மாவட்ட பாடசாலை மாணவர்கள் பங்கு பற்றிய பாகிஸ்தான் பெட்மின்டன் சாம்பியன்ஷிப் 2025!

Date:

பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலயம், பாகிஸ்தான் பெட்மின்டன் சாம்பியன்ஷிப் 2025 போட்டிகளை 21 முதல் 23 வரை இரத்தினபுரியில் அமைந்துள்ள சப்ரகமுவ உள்ளக விளையாட்டு வளாகத்தில் ஏற்பாடு செய்தது.

கடந்த ஆண்டு வெற்றிகரமான போட்டியின் தொடர்ச்சியாக இந்த சாம்பியன்ஷிப் போட்டிகள் ஏற்பாடு செய்யப்பட்டன. 15 வயதுக்குட்பட்ட, 17 வயதுக்குட்பட்ட மற்றும் 20 வயதுக்குட்பட்ட பிரிவுகளில் இரத்தினபுரி மாவட்டத்தில் இருந்து 40 உள்ளூர் பாடசாலைகளை சேர்ந்த மாணவர்கள் இப்போட்டியில் பங்கேற்றனர்.

பாகிஸ்தான் பிரதி உயர் ஸ்தானிகர் வாஜித் ஹசன் ஹஷ்மி அவர்கள் விருது வழங்கும் விழாவிற்கு பிரதம விருந்தினராக கலந்து சிறப்பித்ததோடு இறுதிப் போட்டிகள் மற்றும் தகுதிச் சுற்றுகளில் வெற்றி அடைந்தவர்களுக்கு கிண்ணங்கள் மற்றும் சான்றிதழ்களை வழங்கி வைத்தார்.

பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலயத்தின் ஊடக மற்றும் கலாச்சார செயலாளர் அதில் சத்தார் மற்றும் இரண்டாவது செயலாளர் இப்திகார் ஹுசைன் ஆகியோரும் விருது வழங்கும் விழாவில் கலந்து சிறப்பித்தனர்.

இதன் போது உரையாற்றிய பிரதி உயர்ஸ்தானிகர், இரு நாடுகளுக்குமிடையிலான நட்புறவையும் தொடர்பையும் இணைப்பதில் விளையாட்டின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்த அவர் பாகிஸ்தானும் இலங்கையும் நெருங்கிய உறவைப் பேணி வருவதாக அவர் சுட்டிக்காட்டினார். இத்தகைய விளையாட்டு நிகழ்வுகள் அடிமட்ட அளவில் இருதரப்பு நட்புறவுக்கு சான்றாகும் எனவும் குறிப்பிட்டார்.

பிரதி உயர்ஸ்தானிகர் வீரர்களுக்கு பாகிஸ்தானில் தயாரிக்கப்பட்ட விளையாட்டுப் பொருட்களையும் வழங்கி வைத்ததோடு வெற்றி பெற்ற பாடசாலைகளுக்கு கணனிகளையும் வழங்கி வைத்தார்.

பாகிஸ்தான் பெட்மிண்டன் போட்டி 2025 ஐ சிறப்பாக ஏற்பாடு செய்த ஏற்பாட்டாளர்களுக்கும் பிரதி உயர்ஸ்தானிகர் நன்றி தெரிவித்தார்.

Popular

More like this
Related

தேசப் பற்றுக்கு நபிகளார் ஒரு குறியீடு: சுதந்திர தின விசேட கட்டுரை!

முஹம்மத் பகீஹுத்தீன் பிறந்த மண்ணையும் தேசத்தையும் நேசிப்பது மனிதனிடம் உள்ள ஒரு இயற்கையான...

இனவாதம் மற்றும் மதவாதம் அற்ற சமத்துவ சமூகமே எமது இலக்கு: பிரதமர் உறுதி.

78 ஆவது தேசிய சுதந்திர தினத்தை ஒரு புதிய சுதந்திரம் குறித்த...

பேரண்டப் பொருளாதார நன்மைகள் அனைத்து இன மக்களையும் சென்றடைய வேண்டும் – ஜனாதிபதி அநுர

கடந்த நூற்றாண்டில் தவறவிட்ட வெற்றிகளை நாட்டுக்குப் பெற்றுக்கொடுத்து, அனைவரினதும் கனவான, ‘வளமான...

புதிய கணக்காய்வாளர் நாயகமாக சமுதிகா ஜயரத்ன

சிரேஷ்ட பிரதி கணக்காய்வாளர் நாயகமாகப் பணியாற்றும் எல்.எஸ்.ஐ. ஜயரத்னவை புதிய கணக்காய்வாளர்...