இலங்கைக்கான ரஷ்யாவின் ஒத்துழைப்புகளை மேலும் வலுப்படுத்த உறுதி: ரஷ்யத் தூதுவருடன் சபாநாயகர் கலந்துரையாடல்

Date:

இலங்கைக்கான ரஷ்யத் தூதுவர் லெவன் எஸ். செகேரியன், சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னவை நேற்று முன்தினம் (25) பாராளுமன்றத்தில் சந்தித்துக் கலந்துரையாடினார்.

1956ஆம் ஆண்டு முதல் ஆரம்பமாகி நீண்டகாலமாகக் காணப்படும் இலங்கைக்கும் ரஷ்யாவுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகள் குறித்துச் சுட்டிக்காட்டிய ரஷ்யத் தூதுவர் லெவன் எஸ்.செகேரியன், இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்புக்களை மேலும் வலுப்படுத்த ரஷ்யா உறுதியாக இருப்பதாகவும் தெரிவித்தார்.

இலங்கைக்கு வருகை தரும் ரஷ்ய சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்திருப்பது தொடர்பில் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்திய சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன, ரஷ்யா அண்மையில் வழங்கிய உர நன்கொடை உள்ளிட்ட தொடர்ச்சியான ஒத்துழைப்புக்களுக்கும் நன்றியைத் தெரிவித்தார்.

இலங்கைக்கும், ரஷ்யாவுக்கும் இடையிலான இருதரப்பு இராஜதந்திர உறவுகளை மேலும் வலுப்படுத்துவது மற்றும் பல்வேறு துறைகளில் பரஸ்பர உறவுகளை மேம்படுத்துவது குறித்து இச்சந்திப்பில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.

Popular

More like this
Related

சூடான் உள்நாட்டு போரில் ஆயிரக்கணக்கானோர் மாயம்

சூடானின் எல் - பாஷர் நகரை, துணை இராணுவப் படையான ஆல்.எஸ்.எப்., கைப்பற்றிய...

நவம்பர் 3 முதல் 10 காதி சபைகளுக்கான புதிய நியமனங்கள்: புத்தளம் காதி நீதிபதியாக என்.அஸ்மீர் நியமனம்.

நீண்ட நாட்களாக வெற்றிடமாகக் காணப்பட்ட 10 காதி சபைகளுக்கான நியமனங்களை நவம்பர்...

தேசிய அடையாள அட்டைகள் தடையின்றி வழங்கப்படும்.

தேசிய அடையாள அட்டைகளை தடையின்றி தொடர்ந்து வழங்க முடியுமென ஆட்பதிவுத் திணைக்களம்...

க.பொ.த உயர்தரப்பரீட்சை: அனுமதி அட்டைகள் கிடைக்காதோருக்கு அறிவிப்பு

க.பொ.த உயர்தரப் பரீட்சை  இம்மாதம் 10 ஆம் திகதி ஆரம்பமாகி  எதிர்வரும் ...