இஸ்ரேலிய பணய கைதிகளில் 3 பேரை விடுதலை செய்யும் ஹமாஸ்

Date:

இஸ்ரேலிய பணயக் கைதிகளில் மேலும் 3 பேரை இன்று (08) விடுதலை செய்யவுள்ளதாக ஹமாஸ் அறிவித்துள்ளது.

இஸ்ரேல் மற்றும் காஸாவின் ஹமாஸ் அமைப்பு இடையிலான போர் 15 மாதத்துக்குப் பிறகு முடிவுக்கு வந்துள்ளது.

இந்நிலையில்,  இன்று  விடுவிக்கப்பட உள்ள 3 பணயக் கைதிகளின் பெயர் பட்டியலை ஹமாஸ் அமைப்பு வெளியிட்டுள்ளது.

அதன்படி ஒஹட் பென் அமி, இலி ஷராபி, ஆர் லிவி ஆகிய 3 பேரை இன்று விடுதலை செய்வதாக ஹமாஸ் தெரிவித்தது.

இந்த 3 பேருக்கு ஈடாக தங்கள் நாட்டு சிறையில் உள்ள பலஸ்தீனியர்களில் 183 பேரை இஸ்ரேல் விடுதலை செய்கிறது.

போர் நிறுத்தம் நடைமுறையில் உள்ள நிலையில் இதுவரை இஸ்ரேலிய பணயக் கைதிகளில் 18 பேரை ஹமாஸ் விடுதலை செய்துள்ளது.

அதற்கு ஈடாக தற்போதுவரை 300-க்கும் மேற்பட்ட பலஸ்தீனிய கைதிகளை இஸ்ரேல் விடுதலை செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

 

Popular

More like this
Related

தரம் 6 பாடசாலை அனுமதி: இரண்டாம் சுற்று மேன்முறையீடுகள் நாளை முதல் ஆரம்பம்!

2025 ஆம் ஆண்டு தரம் 5 புலமைப்பரிசில் பெறுபேறுகளின் அடிப்படையில், 2026...

கன்னி மரியாள் சிலை வாயில் சிகரெட் வைத்து அவமதித்த இஸ்ரேல் வீரர்:

லெபனான் - இஸ்ரேல் போர் நிறுத்தம் எட்டப்பட்டாலும் லெபனான் மீதான தாக்குதல்களை...

ஃபிரைட் ரைஸ், பிரியாணி உட்பட பல உணவுப் பொருட்களின் விலை அதிகரிப்பு!

இன்று (07) நள்ளிரவு முதல் ஃபிரைட் ரைஸ், பிரியாணி மற்றும் நாசி கோரெங் ஆகியவற்றின்...

வாடகை மற்றும் குத்தகை வீட்டு உரிமையாளர்களுக்கு பொலிஸாரின் முக்கிய அறிவித்தல்!

வீடுகள் மற்றும் கட்டிடங்களை வாடகை அல்லது குத்தகைக்கு எடுத்து, அவற்றைப் பயன்படுத்தி...