கல்வி வெளியீட்டுத் திணைக்களத்தின் கல்வி வெளியீட்டு ஆணையாளர் நாயகமாக கடமையாற்றிய ரீ.ஜோன்.குவின்ஸ்ரன் அவர்கள் பெப்ரவரி 1 ஆம் திகதியிலிருந்து ஓய்வு பெற்றுள்ளார்.
அதற்கமைய, குறித்த பதவியில் மேலதிக கல்வி வெளியீட்டு ஆணையாளர் நாயகமாகக் கடமையாற்றுகின்ற கல்வி நிர்வாக சேவையின் விசேட தர அதிகாரியான டீ.ஏ. சுபாசினி தெமட்டகொட அவர்களை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் நியமிப்பதற்கு கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சரான பிரதமர் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.