கஹட்டோவிட்ட முஸ்லிம் பாலிகா வித்தியாலயத்தில் புதிய கட்டடத்திற்கான அடிக்கல் நாட்டு விழா

Date:

கஹட்டோவிட்ட முஸ்லிம் பாலிகா மகா வித்தியாலயத்தின் குவைத் கட்டிடத்தின் நிர்மாணப் பணியின் தொடக்க விழா இன்று (28) வெள்ளிக்கிழமை சிறப்பாக இடம்பெற்றது.

குறித்த கட்டடத்திற்கான நிர்மாணப்பணிக்காக, பாடசாலையின் நலன்புரிக்குழுவின் ஏற்பாட்டில் கடந்த டிசம்பர் மாதம் ஒரு கிடுகு விற்பனை நடத்தப்பட்டு, அதன் மூலம் தேவையான நிதி திரட்டப்பட்டது. இதனூடாக கிடைக்கப்பெற்ற நிதியைக் கொண்டு, இன்று கட்டடப்பணிகள் ஆரம்பித்து வைக்கப்பட்டன.

இவ்விழாவில் களனி – கம்பஹா வலய தமிழ் மொழி மூலப் பிரதிக் கல்விப் பணிப்பாளர் அஷ்ஷெய்க் எம்.டி.எம். தௌசீர், கம்பஹா வலய ஆசிரிய ஆலோசகர்கள், கிடுகுக் குழு உறுப்பினர்கள், பாடசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள், அதிபர், ஆசிரியர் குழுவினர் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.

Popular

More like this
Related

மாகாண சபைத் தேர்தல் இந்த வருடத்திற்குள் நிச்சயமாக நடத்தப்படும்

மாகாண சபைத் தேர்தலை நடத்துவது குறித்து அரசாங்கத்தின் தற்போதைய நிலைப்பாட்டை விஞ்ஞான...

களு கங்கையை அண்மித்த பகுதிகளில் சிறிய அளவிலான வெள்ள அபாய எச்சரிக்கை

களு கங்கை வடிநிலப்பகுதியில் உள்ள நீர்மானி நிலையங்களின் நீர்மட்ட ஆய்வுகளின்படி, அடுத்த...

மோசமான வானிலை; உயிரிழப்பு எண்ணிக்கை 2 ஆக உயர்வு!

நாடு முழுவதும் உள்ள பல மாவட்டங்களைப் பாதித்த பேரிடர் சூழ்நிலையின் விளைவாக,...

சர்வதேச கொடுக்கல் வாங்கல்களை எளிதாக்கும் PayPal இன்று முதல் இலங்கையிலும் அறிமுகம்

டிஜிட்டல் பொருளாதாரத்தில் புதிய புரட்சியை ஏற்படுத்தும் வகையில், PayPal பணப்பரிமாற்ற முறை இன்று (15)...