சந்தேக நபரை கண்டுபிடிக்க பொதுமக்களின் உதவியை நாடும் பொலிஸார்!

Date:

வாழைத்தோட்டம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புதுக்கடை நீதிவான் நீதிமன்ற வளாகத்தில் ஒழுங்மைக்கப்பட்ட குற்றவியல் கும்பல் உறுப்பினரான கணேமுல்ல சஞ்சீவ துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்தமை தொடர்பில் கொழும்பு, குற்றப் பிரிவு விசாரணைகள‍ை ஆரம்பித்துள்ளது.

இந்த நிலையில், துப்பாக்கிச் சூடு நடத்தியவருக்கு உதவிய சந்தேக நபரான பெண் ஒருவரை அடையாளம் காண பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.

சந்தேக நபரின் விபரம்

பெயர்: பின்புர தேவாஹே இஷார செவ்வந்தி
வயது: 25
தே.அ.அ.இல: 995892480v
முகவரி: 243/01, நீர்கொழும்பு வீதி, ஜயா மாவத்தை, கட்டுவெல்லேகம

சந்தேக நபர் தொடர்பான தகவல்களை பின்வரும் இலக்கங்களுக்கு அறிவிக்கலாம்:

பணிப்பாளர் கொழும்பு, குற்றப்பிரிவு – 0718591727
கொழும்பு குற்றப்பிரிவு – 0718591735

சந்தேக நபர் தொடர்பான சரியான தகவல்களை வழங்குவோருக்கு பிரதிப் பொலிஸமா அதிபர் பிரியந்த வீரசூரியவின் நிதியிலிருந்து ரொக்கப் பரிசை வழங்குவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் தகவல் அளிப்பவர்களின் ரகசியத்தன்மையை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பொலிஸார் அறிவித்துள்ளனர்.

Popular

More like this
Related

தாயைக் கொன்ற சவூதியர் உட்பட 8 பேருக்கு ஒரே நாளில் மரண தண்டனை!

சவூதி அரேபியாவில் ஒரே நாளில் எட்டு பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது....

தன்னைப் போலவே தன் சந்ததியையும் இலட்சியத்துக்காக உருவாக்க விரும்பிய ஊடகவியலாளர் அனஸ் அல்சரீப்!

இஸ்ரேலின் தாக்குதலில் உயிரிழந்த பாலஸ்தீன பத்திரிகையாளர் அனஸ் சரீபின் மனைவி, தங்கள்...

ஊடகக் குரல்களை அடக்குவது பாலஸ்தீன “இனப்படுகொலை” யின் யதார்த்தங்களை மறைக்கும் பரந்த முயற்சியின் ஒரு பகுதியாகும் – இலங்கை சுதந்திர ஊடக இயக்கம் கண்டனம்

காசா மோதலின் போது ஊடகவியலாளர்கள் கொல்லப்படுவதையும் பலஸ்தீனக் குரல்கள் அடக்கப்படுவதையும் இலங்கையின்...

இராணுவ புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளராக மேஜர் ஜெனரல் மஜீத் நியமனம்

இராணுவ புலனாய்வு படையணியின் புதிய கட்டளைத் தளபதியாக சிரேஷ்ட இராணுவ அதிகாரி...