சந்தேக நபரை கண்டுபிடிக்க பொதுமக்களின் உதவியை நாடும் பொலிஸார்!

Date:

வாழைத்தோட்டம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புதுக்கடை நீதிவான் நீதிமன்ற வளாகத்தில் ஒழுங்மைக்கப்பட்ட குற்றவியல் கும்பல் உறுப்பினரான கணேமுல்ல சஞ்சீவ துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்தமை தொடர்பில் கொழும்பு, குற்றப் பிரிவு விசாரணைகள‍ை ஆரம்பித்துள்ளது.

இந்த நிலையில், துப்பாக்கிச் சூடு நடத்தியவருக்கு உதவிய சந்தேக நபரான பெண் ஒருவரை அடையாளம் காண பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.

சந்தேக நபரின் விபரம்

பெயர்: பின்புர தேவாஹே இஷார செவ்வந்தி
வயது: 25
தே.அ.அ.இல: 995892480v
முகவரி: 243/01, நீர்கொழும்பு வீதி, ஜயா மாவத்தை, கட்டுவெல்லேகம

சந்தேக நபர் தொடர்பான தகவல்களை பின்வரும் இலக்கங்களுக்கு அறிவிக்கலாம்:

பணிப்பாளர் கொழும்பு, குற்றப்பிரிவு – 0718591727
கொழும்பு குற்றப்பிரிவு – 0718591735

சந்தேக நபர் தொடர்பான சரியான தகவல்களை வழங்குவோருக்கு பிரதிப் பொலிஸமா அதிபர் பிரியந்த வீரசூரியவின் நிதியிலிருந்து ரொக்கப் பரிசை வழங்குவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் தகவல் அளிப்பவர்களின் ரகசியத்தன்மையை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பொலிஸார் அறிவித்துள்ளனர்.

Popular

More like this
Related

மாலைதீவில் தமது பணியை ஆரம்பித்த ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்

ஸ்ரீ லங்கன் ஏர்லைன்ஸ் விமான சேவையானது மாலைத்தீவின் மாலேவில் உள்ள வேலானா...

பாராளுமன்ற அலுவல்கள் குழுவிற்கு நீண்ட விடுமுறை

சபாநாயகரின் அனுமதியுடன்பாராளுமன்ற ஊழியர்களுக்கு டிசம்பர் 22 மற்றும் 23 ஆம் திகதிகளில்...

Operation Hawkeye Strike: சிரியாவில் உள்ள ISIS இலக்குகள் மீது அமெரிக்கா வான்வழித் தாக்குதல்.

சிரியாவில், ஐஎஸ்ஐஎஸ் இலக்குகளைக் குறிவைத்து அமெரிக்கா வான்வழித் தாக்குதல் நடத்தியுள்ளது. சிரியாவின், மத்திய...

இலங்கையின் டிஜிட்டல் மயமாக்கலுக்கு உலக வங்கி நிதியுதவி

இலங்கையின் டிஜிட்டல் மயமாக்கலுக்கு ஆதரவளிக்கும் வகையில் 50 மில்லியன் டொலர் திட்டத்திற்கு...