பரீட்சை வினாத்தாள் கசிவு தொடர்பில் கைதான உப அதிபருக்கு விளக்கமறியல்!

Date:

வடமத்திய மாகாணம் முழுவதிலும் உள்ள பாடசாலைகளில் சிங்களம் மற்றும் பௌத்தம் ஆகிய பாடங்களுக்கான தரம் 11 இறுதித் தவணைப் பரீட்சை வினாத்தாள் கசிவு தொடர்பில் கைது செய்யப்பட்ட பாடசாலை உப அதிபர் பெப்ரவரி 07 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

அனுராதபுரம் பகுதியில் உள்ள பாடசாலை அதிபர் ஒருவரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளவர் ஆவார்.

சந்தேக நபர் இன்று அனுராதபுரம் பிரதான நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட போதே, நீதிவான் நாலக சஞ்சீவ ஜயசூரிய இந்த உத்தரவை பிறப்பித்தார்.

சீல் வைக்கப்பட்ட பரீட்சை வினாத்தாள்களை வேண்டுமென்றே குளறுபடி செய்து தம்புத்கம பிரதேசத்தில் உள்ள கல்வி வகுப்பு ஆசிரியருக்கு வாட்ஸ்அப் ஊடாக அனுப்பி அரசாங்கத்திற்கு 11.5 மில்லியன் ரூபாவிற்கும் அதிகமான நிதி இழப்பு ஏற்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டார்.

இந்த சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள ஏனைய நபர்கள் தொடர்பில் விசாரணைகள் தொடர்வதால் மேலும் கைதுகள் எதிர்பார்க்கப்படுவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Popular

More like this
Related

9 A சித்தி பெற்ற மாணவிக்கு 50,000 ரூபாய் பரிசு!

கல்முனை நற்பிட்டிமுனை அல்-அக்ஸா மத்திய மகா வித்தியாலய மாணவி பாத்திமா அனபா,...

இந்திய வெளிவிவகார அமைச்சருடன் பிரதமர் ஹரிணி சந்திப்பு!

இந்தியாவுக்கு உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய அந்நாட்டு...

மாஸ்கோவில் புடினுடன் சிரியாவின் இடைக்கால ஜனாதிபதி சந்திப்பு!

ரஷ்யா தலைநகர் மாஸ்கோவில், அதிபர் ஜனாதிபதி புதினை, சிரியாவின் இடைக்கால ஜனாதிபதி...

இஷாரா செவ்வந்தி உள்ளிட்டோரை தடுப்புக் காவலில் வைத்து விசாரிக்க முடிவு

இஷாரா செவ்வந்தி உட்பட நாட்டுக்கு அழைத்து வரப்பட்ட ஆறு பேரிடம் மேலும்...