பாலியல் வன்கொடுமை வழக்கை வாபஸ் பெற மறுத்த முஸ்லிம் நபர் உயிருடன் எரித்துக் கொலை

Date:

இந்தியாவின் உத்தர பிரதேச மாநிலத்தில் சாஜித் என்பவரின் மனைவி ஓர் இந்துத்துவ தீவிரவாத போக்குடையவரால் கற்பழிக்கப்பட்டதைத் தொடர்ந்து குறித்த குற்றவாளிக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது.

இந்நிலையில் நீதிமன்ற விசாரணைகள் ஆரம்பமாவதற்கு சில நாட்களே இருந்த நிலையில் கடந்த புதன்கிழமை சாஜித் உயிரோடு எரித்து படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

இது குறித்து குடும்பத்தார் தகவல் தருகையில்,

2022 ஜின் மாதத்தில் சாஜித்தின் மனைவி பஹோலா யாதவ் என்பவரால் மிருகத்தனமான முறையில் கற்பழிப்புக்குள்ளானர்  இந்த யாதவ் செல்வாக்கு மிக்க அப்பிரதேச தலைவராவர்.

தனது வீட்டுக்கு சமையல் வேலைக்காக வரும்படி அழைத்த யாதவ் குறித்த பெண்ணை தனது ஆசைக்கு இணங்குமாறு கோரியுள்ளார். இதனை மறுத்த அப்பெண்ணை யாதவ் பலாத்கரமாக கற்பழித்ததோடு குடும்பத்தாரை தீர்த்துக்கட்டுவதாகவும் எச்சரித்தார்.

இந்த விடயம் தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்றை கொடுக்க சென்ற போது அதனை தடுக்க  கடுமையான அழுத்தங்கள் கொடுக்கப்பட்டன.

இருப்பினும் முறைப்பாடு செய்தே ஆக வேண்டும் என்ற நிலைப்பாட்டில் சாஜித்தின் மனைவி இருந்ததால் அவரைக் கடத்திச் சென்று சுமார் 4 மாதங்கள் தடுத்து வைத்து இந்த விவகாரம் வெளியில் வராதவாறு செய்தனர் என்று தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து சஜித்தின் எரிந்த அடையாளம் காண முடியாத உடல் ஒரு வயலில் கண்டெடுக்கப்பட்டது. டீசலில் ஊற்றி உயிருடன் எரிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அவர் ஒரு இடத்திற்கு வரவழைக்கப்பட்டு, யாதவின் அடியாட்களால் தாக்கப்பட்டு,  பின்னர் தீ வைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

 

Popular

More like this
Related

நாட்டில் சில இடங்களில் ஓரளவு பலத்த மழை பெய்யலாம்

வடக்கு, கிழக்கு, வடமத்திய, மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களின் பல...

சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் ஹிஜாப் விவகாரம் தொடர்பில் ரிஷாத் பதியுதீன் அமைச்சருக்கு கடிதம்!

திருகோணமலையில்  சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் அரசியலமைப்பு உரிமைகளைப் பாதுகாக்க...

காலாவதியான பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த முன்னணி பல்பொருள் அங்காடிக்கு அபராதம்

காலாவதியான உணவுப் பொருட்களை விற்பனை செய்ததாக குற்றத்தை ஒப்புக்கொண்டதால், முன்னணி பல்பொருள்...

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் கவனம் 

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் திறந்த பாராளுமன்ற...