T20 கடின பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டியில் விளையாட இந்தியா பயணமான கஹட்டோவிட்ட வீரர்!

Date:

இந்தியாவில் பெங்களூர் மணிபாலில் நடைபெறவுள்ள T20 கடின பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டியில் விளையாடுவதற்காக கஹட்டோவிட்டவைச் சேர்ந்த முபீன் மதனி இன்று இந்தியா புறப்பட்டார்.

நாளை 27 ஆம் திகதி முதல் தொடர்ந்து நான்கு நாட்கள் நடைபெற உள்ள T20 கடின பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டியில் எஸ்.எம் கிரிக்கெட்டர்ஸ் உட்பட ஆறு அணிகள் கலந்துகொள்கின்றன.

அந்தவகையில் C S cricket club அணியைப் பிரதிநிதித்துவப்படுத்தி முபீன் களம் இறங்குகின்றார்.

ஓர் அணியை பிரதிநிதித்துவப்படுத்தி இலங்கையிலிருந்து வெளிநாடு சென்று கலந்து கொள்ளும் முதலாவது கஹட்டோவிட்ட வீரர் இவராவார்.

முபீன் உள்ளூரில் Essex அணிக்கு தலைமை தாங்கி விளையாடி வருவதுடன் பிரதேசத்தின் மாபெரும் கிரிக்கெட் சுற்றுப்போட்டியான KPL போட்டிகளையும் முன் நின்று நடத்தி வருகிறார்.

முபீனின் இந்த பயணம் வெற்றி பெறவும் சாதனைகள் படைக்கவும் ‘நியூஸ் நவ்’ சார்பாக வாழ்த்துகிறோம்.

Popular

More like this
Related

நாட்டின் சில பகுதிகளில் 50 மி.மீ. இற்கும் அதிக மழை

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை...

போதைப்பொருள் கடத்தல்காரர் ஷிரான் பாசிக்கின் தந்தை கைது!

பிரபல போதைப்பொருள் கடத்தல்காரரும் பாதாள உலகக் குழுத் தலைவனுமான ஷிரான் பாசிக்கின்...

சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழு இலங்கை வருகை

இலங்கையின் விரிவாக்கப்பட்ட நிதி வசதித் திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்படும் பொருளாதார மறுசீரமைப்பு...

ஜனாதிபதியை சந்தித்தது ஜம்இய்யத்துல் உலமா: முஸ்லிம் சமூகத்தின் 8 முக்கிய கோரிக்கைகள் அடங்கிய மகஜர் கையளிப்பு!

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அவர்களுக்கும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின்...