மத்திய வங்கியின் பெயரில் சமூக வலைத் தளங்களில் போலி விளம்பரங்கள்: அவதானத்துடன் செயற்படுமாறும் வேண்டுகோள்

Date:

இலங்கை மத்திய வங்கியின் பெயரைப் பயன்படுத்தி  சமூக வலைத் தளங்களில் போலியான விளம்பரங்கள் வெளியிடப்பட்டு வருவதாகவும் எனவே பொதுமக்களை அவதானத்துடன் செயற்படுமாறும் இலங்கை மத்திய வங்கி எச்சரிக்கை விடுத்துள்ளது.

இது குறித்து இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிவிப்பில் தாம் ” மத்திய வங்கியில் காணப்படும்  தொழில்வாய்ப்புக்கள் எதையும் மூன்றாம் தரப்பு தளங்களில் விளம்பரப்படுத்துவதில்லை எனவும்,  தமது  இணையத்தளத்தின் தொழிவாய்ப்புப் பிரிவின் கீழும் மத்திய வங்கியின் உத்தியோகபூர்வ சமூக வலைத்தளங்களிலும் மாத்திரமே இது தொடர்பான தகவல்களை  வெளியிடுவதாகவும் அறிவித்துள்ளது.

அத்துடன் இலங்கை மத்திய வங்கி சார்பில் ஆட்சேர்ப்புச் செய்வதற்கு வேறு வலைத்தளங்களுக்கோ  அல்லது தனிநபர்களுக்கோ  அதிகாரமளிக்கப்படவில்லை எனவும்  குறிப்பிட்டுள்ளது.

மேலும் https://www.cbsl.gov.lk/en/careers என்ற உத்தியோகபூர்வ இலங்கை மத்திய வங்கியின் தொழில்வாய்ப்பு பக்கத்தினூடாக பரீட்சித்து விண்ணப்பிக்குமாறும்  அவதானத்துடன் செயற்படுமாறும்  இலங்கை மத்திய வங்கி பொது மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.

Popular

More like this
Related

நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் அதிகரிப்பு

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் இன்று (21) நள்ளிரவு 12.00 மணி முதல்...

உலக நாடுகளின் எரிபொருள் விலையேற்றம்

அண்மையில் வெளியான உலக எரிபொருள் விலையேற்றத்திற்கமைய பல நாடுகளில் 20 வீதத்திற்கும்...

இலங்கைக்கான சவூதி அரேபியத் தூதுவரின் பெருநாள் வாழ்த்துச் செய்தி

புனித ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளை முன்னிட்டு, இலங்கைக்கான சவூதி அரேபியத்...

ஜனாதிபதியின் ஈகைத் திருநாள் வாழ்த்துச் செய்தி!

உலகெங்கிலும் உள்ள முஸ்லிங்கள் ஒரு மாதம் முழுவதும் நோன்பு நோற்று, அதன்...