மத்திய வங்கியின் பெயரில் சமூக வலைத் தளங்களில் போலி விளம்பரங்கள்: அவதானத்துடன் செயற்படுமாறும் வேண்டுகோள்

Date:

இலங்கை மத்திய வங்கியின் பெயரைப் பயன்படுத்தி  சமூக வலைத் தளங்களில் போலியான விளம்பரங்கள் வெளியிடப்பட்டு வருவதாகவும் எனவே பொதுமக்களை அவதானத்துடன் செயற்படுமாறும் இலங்கை மத்திய வங்கி எச்சரிக்கை விடுத்துள்ளது.

இது குறித்து இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிவிப்பில் தாம் ” மத்திய வங்கியில் காணப்படும்  தொழில்வாய்ப்புக்கள் எதையும் மூன்றாம் தரப்பு தளங்களில் விளம்பரப்படுத்துவதில்லை எனவும்,  தமது  இணையத்தளத்தின் தொழிவாய்ப்புப் பிரிவின் கீழும் மத்திய வங்கியின் உத்தியோகபூர்வ சமூக வலைத்தளங்களிலும் மாத்திரமே இது தொடர்பான தகவல்களை  வெளியிடுவதாகவும் அறிவித்துள்ளது.

அத்துடன் இலங்கை மத்திய வங்கி சார்பில் ஆட்சேர்ப்புச் செய்வதற்கு வேறு வலைத்தளங்களுக்கோ  அல்லது தனிநபர்களுக்கோ  அதிகாரமளிக்கப்படவில்லை எனவும்  குறிப்பிட்டுள்ளது.

மேலும் https://www.cbsl.gov.lk/en/careers என்ற உத்தியோகபூர்வ இலங்கை மத்திய வங்கியின் தொழில்வாய்ப்பு பக்கத்தினூடாக பரீட்சித்து விண்ணப்பிக்குமாறும்  அவதானத்துடன் செயற்படுமாறும்  இலங்கை மத்திய வங்கி பொது மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.

Popular

More like this
Related

சூடான் உள்நாட்டு போரில் ஆயிரக்கணக்கானோர் மாயம்

சூடானின் எல் - பாஷர் நகரை, துணை இராணுவப் படையான ஆல்.எஸ்.எப்., கைப்பற்றிய...

நவம்பர் 3 முதல் 10 காதி சபைகளுக்கான புதிய நியமனங்கள்: புத்தளம் காதி நீதிபதியாக என்.அஸ்மீர் நியமனம்.

நீண்ட நாட்களாக வெற்றிடமாகக் காணப்பட்ட 10 காதி சபைகளுக்கான நியமனங்களை நவம்பர்...

தேசிய அடையாள அட்டைகள் தடையின்றி வழங்கப்படும்.

தேசிய அடையாள அட்டைகளை தடையின்றி தொடர்ந்து வழங்க முடியுமென ஆட்பதிவுத் திணைக்களம்...

க.பொ.த உயர்தரப்பரீட்சை: அனுமதி அட்டைகள் கிடைக்காதோருக்கு அறிவிப்பு

க.பொ.த உயர்தரப் பரீட்சை  இம்மாதம் 10 ஆம் திகதி ஆரம்பமாகி  எதிர்வரும் ...