முஸ்லிம் திணைக்களத்தின் ஏற்பாட்டில் முஸ்லிம் சமய செயற்பாடுகள் பற்றி வைத்தியர்களுக்கு விளக்கமளிப்பு

Date:

-எம்.எஸ்.எம்.ஸாகிர்

தேசிய மொழிக் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் வேண்டுகோளுக்கிணங்க அதன் மூலம் நடாத்தப்படும் அரச மொழிகள் கல்வி பயிற்சி நெறியைப் பூர்த்தி செய்த 40 வைத்தியர்களுக்கு முஸ்லிம் சமய செயற்பாடுகள் தொடர்பாக விளக்கமளிக்கும் நிகழ்வு முஸ்லிம் சமய பண்பாட்டு அலுவல்கள் திணைக்களத்தின் மூலம் வெள்ளவத்தை ஜும்ஆப் பள்ளிவாசலில் நடைபெற்றது.

இந் நிகழ்வை வெள்ளவத்தை ஜும்ஆப் பள்ளிவாசல் மற்றும் அதன் நிர்வாகிகள் குறுகிய காலத்தில் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்ச்சியின் மூலம், முஸ்லிம் சமய பண்பாட்டு அலுவல்கள் திணைக்களம், முஸ்லிம் சமூதாயத்தின் பண்பாடுகள் மற்றும் மதப்பண்புகளின் ஆழமான புரிதலை உருவாக்க கவனம் செலுத்தியது.

இதில் வளவாளர்களாக வெள்ளவத்தை ஜும்ஆப் பள்ளிவாசலின் வேண்டுகோளின் பேரில் நிதா பவுண்டேஷன் நிறுவனம் பங்கு கொண்டு இந்த நிகழ்ச்சியை நடாத்தினர்.

 

Popular

More like this
Related

உலக அமைதி தினம்: உலக பாதுகாப்பு மற்றும் நிலைத்தன்மையை மேம்படுத்துவதில் சவூதி அரேபியாவின் முயற்சிகள்

எழுத்து: கலித் ஹமூத் அல்-கஹ்தானி இலங்கைக்கான சவூதி அரேபிய தூதுவர் அமைதி மதிப்புகளுக்கான...

‘உலக மக்கள் காசா பக்கம் நிற்கும் வரை இஸ்ரேல்-அமெரிக்காவின் சதி நிறைவேறாது”: இஸ்ரேலுக்கு எதிராக சென்னையில் நடைபெற்ற பேரணி!

சென்னையில் காசாவில் நிலவும் போரினை உடனடியாக நிறுத்த வலியுறுத்தி, பெரியாரிய உணர்வாளர்கள்...

2025(2026)சாதாரண பரீட்சைக்கான ONLINE விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன!

2025(2026) ஆம் ஆண்டிற்கான க.பொ.த சாதாரணதர பரீட்சைககு தோற்றுவதற்கான நிகழ்நிலை விண்ணப்பங்கள்...

இலங்கையில் அதிகரித்துள்ள இணையவழி துஷ்பிரயோகம்!

2025 ஆம் ஆண்டு இதுவரை, இணையவழி ஏமாற்றுதல் மூலம் 28 சிறுவர்களும்...