2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட முன்மொழிவை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று (17) நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்தார்.
இதற்கமைய 2025 ஆம் ஆண்டிற்கான வருவாய் ரூ.4,990 பில்லியனாகவும், செலவீனங்கள் ரூ.7,190 பில்லியனாகவும் மதிப்பிடப்பட்டுள்ளது.
அதன்படி, வரவு செலவுத் திட்ட வருமான மிகை பற்றக்குறை ரூ.2,200 பில்லியனாகும்.
அநுர அரசின் கன்னி வரவு செலவுத் திட்டத்தில் பல்வேறு விடயங்கள் ஜனாதிபதியினால் முன்மொழியப்பட்டுள்ளன.
ஜனாதிபதி தனது வரவு செலவு திட்ட உரையை இரண்டு மணி நேரம் 45 நிமிடங்கள் ஆற்றி இருந்தமை குறிப்பிடத்தக்கது.