இஸ்ரேலிய பணயக் கைதிகளில் மேலும் 3 பேரை இன்று (08) விடுதலை செய்யவுள்ளதாக ஹமாஸ் அறிவித்துள்ளது.
இஸ்ரேல் மற்றும் காஸாவின் ஹமாஸ் அமைப்பு இடையிலான போர் 15 மாதத்துக்குப் பிறகு முடிவுக்கு வந்துள்ளது.
இந்நிலையில், இன்று விடுவிக்கப்பட உள்ள 3 பணயக் கைதிகளின் பெயர் பட்டியலை ஹமாஸ் அமைப்பு வெளியிட்டுள்ளது.
அதன்படி ஒஹட் பென் அமி, இலி ஷராபி, ஆர் லிவி ஆகிய 3 பேரை இன்று விடுதலை செய்வதாக ஹமாஸ் தெரிவித்தது.
இந்த 3 பேருக்கு ஈடாக தங்கள் நாட்டு சிறையில் உள்ள பலஸ்தீனியர்களில் 183 பேரை இஸ்ரேல் விடுதலை செய்கிறது.
போர் நிறுத்தம் நடைமுறையில் உள்ள நிலையில் இதுவரை இஸ்ரேலிய பணயக் கைதிகளில் 18 பேரை ஹமாஸ் விடுதலை செய்துள்ளது.
அதற்கு ஈடாக தற்போதுவரை 300-க்கும் மேற்பட்ட பலஸ்தீனிய கைதிகளை இஸ்ரேல் விடுதலை செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.