கட்டுப்பணத்தை மீளச் செலுத்த முடிவு:28 ஆம் திகதிக்கு முன்னர் விண்ணப்பிக்குமாறு வேண்டுகோள்

Date:

2023 ஆம் ஆண்டு நடத்தப்படவிருந்து ஒத்திவைக்கப்பட்ட உள்ளூராட்சி தேர்தலுக்காக கட்சிகளாலும் சுயாதீன வேட்பாளர்களாலும் செலுத்தப்பட்ட கட்டுப்பணத்தினை- திருப்பி செலுத்துவதற்கு நேற்றுமுன்தினம் (17) பாராளுமன்ற அமர்வில் நிறைவேற்றப்பட்ட 2025-1 ஆம் இலக்க உள்ளூராட்சி தேர்தல்கள் சட்டத்தின் 2(3) பிரிவுக்கு அமைய பற்றுச்சீட்டை முன்வைப்பதன் மூலம் கட்டுப் பணத்தை மீளச் செலுத்த வேண்டும் என குறித்துரைக்கப்பட்டுள்ளது.

அதன்படி பற்றுச்சீட்டையும் கட்டுப்பணத்தை மீளப்பெறுவதற்கான விண்ணப்பப் படிவத்தையும் கட்டுப்பணம் செலுத்திய மாவட்ட அலுவலகத்துக்கு இம்மாதம் 28 ஆம் திகதிக்கு முன்னர் கையளிக்குமாறு தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன்ஸ்ரீ ரத்நாயக்க வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இந்த ஒழுங்கில் விண்ணப்பங்களை சமர்ப்பித்தவர்களுக்கு அவர்களுடைய கட்டுப்பணத்தை உடனடியாக வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

தேசப் பற்றுக்கு நபிகளார் ஒரு குறியீடு: சுதந்திர தின விசேட கட்டுரை!

முஹம்மத் பகீஹுத்தீன் பிறந்த மண்ணையும் தேசத்தையும் நேசிப்பது மனிதனிடம் உள்ள ஒரு இயற்கையான...

இனவாதம் மற்றும் மதவாதம் அற்ற சமத்துவ சமூகமே எமது இலக்கு: பிரதமர் உறுதி.

78 ஆவது தேசிய சுதந்திர தினத்தை ஒரு புதிய சுதந்திரம் குறித்த...

பேரண்டப் பொருளாதார நன்மைகள் அனைத்து இன மக்களையும் சென்றடைய வேண்டும் – ஜனாதிபதி அநுர

கடந்த நூற்றாண்டில் தவறவிட்ட வெற்றிகளை நாட்டுக்குப் பெற்றுக்கொடுத்து, அனைவரினதும் கனவான, ‘வளமான...

புதிய கணக்காய்வாளர் நாயகமாக சமுதிகா ஜயரத்ன

சிரேஷ்ட பிரதி கணக்காய்வாளர் நாயகமாகப் பணியாற்றும் எல்.எஸ்.ஐ. ஜயரத்னவை புதிய கணக்காய்வாளர்...