கஹட்டோவிட்ட முஸ்லிம் பாலிகா வித்தியாலயத்தில் புதிய கட்டடத்திற்கான அடிக்கல் நாட்டு விழா

Date:

கஹட்டோவிட்ட முஸ்லிம் பாலிகா மகா வித்தியாலயத்தின் குவைத் கட்டிடத்தின் நிர்மாணப் பணியின் தொடக்க விழா இன்று (28) வெள்ளிக்கிழமை சிறப்பாக இடம்பெற்றது.

குறித்த கட்டடத்திற்கான நிர்மாணப்பணிக்காக, பாடசாலையின் நலன்புரிக்குழுவின் ஏற்பாட்டில் கடந்த டிசம்பர் மாதம் ஒரு கிடுகு விற்பனை நடத்தப்பட்டு, அதன் மூலம் தேவையான நிதி திரட்டப்பட்டது. இதனூடாக கிடைக்கப்பெற்ற நிதியைக் கொண்டு, இன்று கட்டடப்பணிகள் ஆரம்பித்து வைக்கப்பட்டன.

இவ்விழாவில் களனி – கம்பஹா வலய தமிழ் மொழி மூலப் பிரதிக் கல்விப் பணிப்பாளர் அஷ்ஷெய்க் எம்.டி.எம். தௌசீர், கம்பஹா வலய ஆசிரிய ஆலோசகர்கள், கிடுகுக் குழு உறுப்பினர்கள், பாடசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள், அதிபர், ஆசிரியர் குழுவினர் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.

Popular

More like this
Related

சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் அறிக்கைகளை சமர்ப்பிக்காத அதிகாரிகளுக்கு எதிராக வழக்குத் தாக்கல்!

2025 ஆம் ஆண்டுக்கான சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பான அறிக்கையினை சமர்ப்பிக்காத...

வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்குத் தேவையான சாரதி அனுமதிப்பத்திரங்களை வழங்குவதற்கான அலுவலகம் திறப்பு

நாட்டிற்கு வருகை தருகின்ற வெளிநாட்டவர்களுக்குத் தேவையான சாரதி அனுமதிப்பத்திரங்களை வழங்குவதற்கான அலுவலகம்...

கம்பஹா – கொழும்பு தனியார் பஸ் சேவைகள் இடைநிறுத்தம்

ஒரு சில தனியார் பஸ் சேவைகள் தமது சேவைகளிலிருந்து விலகியுள்ளன. கம்பஹா –...

நாட்டின் சில பகுதிகளில் அவ்வப்போது மழை!

இன்றையதினம் (04) நாட்டின் மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும்...