காசாவில் துன்பப்படும் மக்களுக்காக தன்னுடைய சொகுசு காரை அன்பளிப்பு செய்த துருக்கி நபர்

Date:

கடந்த 15 மாதங்களுக்கும் மேலாக நடைபெற்ற கொடூரமான காசா யுத்தம் உலகளவில் மிகப்பெரிய உணர்வலைகளை உருவாக்கியது. பல்வேறு நாடுகளில் உள்ள மக்கள் அவர்களுக்காக ஆர்ப்பாட்டம் செய்ததுடன், நிவாரண உதவிகளையும் வழங்கி வந்தனர்.

அதேநேரம் பல நாடுகளைச் சேர்ந்த நபர்கள் காசா மக்களுக்கு நிவாரண உதவிகளை தொடர்ந்து வழங்கி வருகின்றனர். இந்த நிலையில், துருக்கி நாட்டைச் சேர்ந்த ஒரு கருணைமிக்க நபர், தனது பெயரை குறிப்பிடாமல் அண்மையில் வாங்கிய அதி நவீன காரை முழுமையாக காசா நிவாரண நிதிக்கு அன்பளிப்பு செய்துள்ளார்.

இந்த காரின் பெறுமதி முழுவதுமாக காசா மக்களுக்கான உதவிகளுக்காக பயன்படுத்தப்பட வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டுள்ளார். இத்தகைய மனிதநேய செயல்கள், உலகம் முழுவதும் மேலும் பரவ வேண்டும் என்பதே பலரின் விருப்பமாக உள்ளது.

இத்தகைய மனிநேயமிக்க உணர்வு மிகுந்த செய்கைகள் தொடர்ந்து வர வேண்டும் என அனைவரும்  பிரார்த்திபோம்.

 

Popular

More like this
Related

ஜனாதிபதி நிதியம்- ஜனசக்தி அறக்கட்டளை இடையே விசேட புரிந்துணர்வு ஒப்பந்தம்!

18 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்குக் கிடைக்கும் சுகாதார வசதிகளை விரிவுபடுத்தும் நோக்கில் ஜனாதிபதி...

வித்யா கொலை வழக்கு; குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதித்து உயர் நீதிமன்றம் தீர்ப்பு

2015-ஆம் ஆண்டில் யாழ்ப்பாணத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய பாடசாலை மாணவி சிவலோகநாதன்...

சிறுவர்களின் டிஜிட்டல் பாதுகாப்பை உறுதி செய்யப் புதிய கொள்கை!

சிறுவர்கள் டிஜிட்டல் சாதனங்கள் மற்றும் சமூக ஊடகங்களை மேற்பார்வையின்றிப் பயன்படுத்துவதால் ஏற்படும்...

தவெகவுக்கு ஆதரவு அளிக்க முடிவு: காங்கிரஸ் விதித்த நிபந்தனை!

தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைக்க ஆதரவளித்துள்ள காங்கிரஸ், அக்கட்சிக்கு ஒரேவொரு...