அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா நாடு பூராகவும் இயங்கி வருகின்ற தனது கிளைகளினூடாக பொதுமக்களுக்கும் துறைசார்ந்தவர்களுக்கும் உலமாக்களுக்கும் பல்வேறு நிகழ்ச்சிகளை நடாத்தி வருகின்றது.
இந்த வகையில் உலமா சபையின் கொழும்பு கிழக்கு கிளை எதிர்வரும் ரமழான் நோன்பு காலத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்துள்ள உலமாக்களுக்கு நோன்பு தொடர்பான மார்க்க சட்ட் விளக்க செயலமர்வு இம்மாதம் 26ஆம் திகதி கொத்தட்டுவை நாஸ் கலாசார மண்டபத்தில் ஏற்பாடு செய்துள்ளது.
இந்த நிகழ்வில் வளவாளராக பிரபல மார்க்க அறிஞர் அஷ்ஷெய்க் அக்ரம் அபுல் ஹஸன் (நிழாமி, மதனி) M.A அவர்கள் கலந்து கொண்டு விரிவுரையாற்றவுள்ளார்.
மேலதிக தகவல்களுக்கு அஷ்ஷைக் எம்.எப்.எம்.சல்மான் (இன்ஆமி) 0774197447 செயலாளர் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா கொழும்பு கிழக்கு கிளை
அஷ்ஷைக் எச்.எம்.அஸாத் (இஹ்ஸானி) 0750768175 உறுப்பினர் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா கொழும்பு கிழக்கு கிளை ஆகியோரை தொடர்புகொள்ளுங்கள்.