சுபோதினி அறிக்கையின் சம்பள முரண்பாட்டுக்கான தீர்வு பட்ஜெட்டில் உள்ளடக்கப்படவில்லை: ஜோசப் ஸ்டாலின்

Date:

ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களுக்கான சம்பள முரண்பாடுகளை நீக்குதல் தொடர்பான ‘சுபோதினி குழு அறிக்கைக்கு’ இவ்வவருடம்  வரவுசெலவுத் திட்டத்தில் கவனம் செலுத்தப்படவில்லையென  இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்தார்.

குறித்த விவகாரம் தொடர்பாக எதிர்காலத்தில் தொழிற் சங்கங்களுடன் கலந்துரையாடல்கள் நடாத்தப்படுமென்றும் அவர் தெரிவித்துள்ளார்.

சுபோதினி குழு அறிக்கையின் பிரகாரம், சம்பள முரண்பாடுகளை முற்றிலுமாக நீக்குவதற்கு 46 பில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கப்பட வேண்டும் என்றும், 2022 பட்ஜெட்டில் இந்த சம்பள முரண்பாடுகளில் 1/3 பங்கு நீக்கப்பட்டதாகவும் அவர் தெரிவவித்துள்ளார்.

மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 06 சதவீதம் கல்வித் துறைக்கு ஒதுக்கப்பட வேண்டும் என்றாலும், இவ்வருடம் வரவு செலவுத் திட்டமும் அதில் கவனம் செலுத்தவில்லையென்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இருப்பினும், சம்பள ஏற்றத்தாழ்வு பிரச்சினைகள் குறித்து தொழிற்சங்கங்களுடன் விவாதித்து, ஒரு பொதுவான தீர்வை எட்டுவேன், பின்னர் அரசாங்கத்துடன் விவாதிப்பேன் என்றும் ஜோசப் ஸ்டாலின் மேலும் தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

புதுப்பிக்கப்பட்ட Google Map A மற்றும் B வீதி வரைபடங்கள் !

வீதி அபிவிருத்தி அதிகார சபையுடன் இணைந்து Google Map A மற்றும்...

டிசம்பர் மாதத்தின் முதல் 8 நாட்களில் 50,000 ஐத் தாண்டிய சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை

நாட்டில் நிலவிய சீரற்ற வானிலை காரணமாக ஏற்பட்ட அனர்த்தத்தின் மத்தியிலும் சுற்றுலாப்...

தரம் 6 மாணவர் சேர்க்கைக்கான இணையவழி விண்ணப்ப காலம் நீடிப்பு!

இலங்கையில் ஏற்பட்டுள்ள அனர்த்த நிலைமையைக் கருத்தில் கொண்டு, தரம் 6 இல்...

அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கை மக்களுக்கு குவைத் தலைவர்கள் இரங்கல்.

குவைத் நாட்டின் தலைவர்கள் டிட்வா புயல்தாக்கத்தினால் துயரத்தில் வாடும் இலங்கை மக்களுக்கு...