தலைசிறந்த மார்க்க அறிஞரான எம்.முஹம்மது மதனீ காலமானார்.

Date:

கேரள ஜம்இயத்துல் உலமாவின் தலைவரும், கேரள நத்வதுல் முஜாஹிதீன் (KNM) பொதுச்செயலாளருமான எம்.முஹம்மது மதனீ காலமானார்.

கேரள மாநிலத்தில் தலைசிறந்த மார்க்க அறிஞர்களில் ஒருவரான முஹம்மது மதனீ அவர்கள் சிறந்த எழுத்தாளரும் மார்க்க பிரச்சாரகரும், இஸ்லாமிய சமூகம் சார்ந்த பல்வேறு தளங்களில் பணியாற்றியவர்.

கேரள மாநில ஹிலால் கமிட்டி தலைவராக பொறுப்பு வகித்துள்ள முஹம்மது மதனீ அவர்கள் நீண்டகாலம் கோழிக்கோடு கலீபா மஸ்ஜித் இமாமாகவும் பணியாற்றியவர்.

புளிக்கல் மதீனத்துல் உலூம் மதரஸா, எடவண்ண ஜாமிஆ நத்வியா அரபிக் கல்லூரியில் முதல்வராக பணியாற்றிய போது இவர் உருவாக்கிய மாணவர்கள் தற்போது உலகின் பல பகுதிகளிலும் மார்க்க பணியாற்றி வருகின்றார்.

எல்லாம் வல்ல அல்லாஹ் அவரின் இம்மையின் நல்லறங்களை அங்கீகரித்து உயர்ந்த சுவனத்தை நிரந்தரமாக்குவானாக..

 

Popular

More like this
Related

சுகாதாரத் துறையில் தகவல் தொழில்நுட்ப பயன்பாடு குறித்து இந்திய–இலங்கை சுகாதார அமைச்சர்கள் இடையில் கலந்துரையாடல்

இந்தியாவின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணையமைச்சர் திருமதி அனுப்பிரியா படேலுடன்...

கம்பளை டவுன் ஜும்ஆ மஸ்ஜித்துக்கு ஹஜ் பயண முகவர் சங்கத்தினால் நிவாரணப் பொருட்கள் கையளிப்பு

நாட்டில் அண்மையில் ஏற்பட்ட பேரிடர் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை இயல்பு...

கோமரங்கல்ல வித்தியாலயத்தில் சிறப்பாக அனுஷ்டிக்கப்பட்ட உலக அரபு மொழி தினம்.

டிசம்பர் 18ஆம் திகதி, கலென்பிந்துனுவெவ பகுதியில் அமைந்துள்ள கோமரங்கல்ல மகா வித்தியாலயத்தில்...

GovPay டிஜிட்டல் கொடுப்பனவுகள் ரூ. 2 பில்லியனைத் தாண்டியது

இலங்கையின் டிஜிட்டல் மாற்றத்தில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லைக் குறிக்கும் வகையில், அரசாங்கத்தின்...