பரீட்சை வினாத்தாள் கசிவு தொடர்பில் கைதான உப அதிபருக்கு விளக்கமறியல்!

Date:

வடமத்திய மாகாணம் முழுவதிலும் உள்ள பாடசாலைகளில் சிங்களம் மற்றும் பௌத்தம் ஆகிய பாடங்களுக்கான தரம் 11 இறுதித் தவணைப் பரீட்சை வினாத்தாள் கசிவு தொடர்பில் கைது செய்யப்பட்ட பாடசாலை உப அதிபர் பெப்ரவரி 07 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

அனுராதபுரம் பகுதியில் உள்ள பாடசாலை அதிபர் ஒருவரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளவர் ஆவார்.

சந்தேக நபர் இன்று அனுராதபுரம் பிரதான நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட போதே, நீதிவான் நாலக சஞ்சீவ ஜயசூரிய இந்த உத்தரவை பிறப்பித்தார்.

சீல் வைக்கப்பட்ட பரீட்சை வினாத்தாள்களை வேண்டுமென்றே குளறுபடி செய்து தம்புத்கம பிரதேசத்தில் உள்ள கல்வி வகுப்பு ஆசிரியருக்கு வாட்ஸ்அப் ஊடாக அனுப்பி அரசாங்கத்திற்கு 11.5 மில்லியன் ரூபாவிற்கும் அதிகமான நிதி இழப்பு ஏற்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டார்.

இந்த சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள ஏனைய நபர்கள் தொடர்பில் விசாரணைகள் தொடர்வதால் மேலும் கைதுகள் எதிர்பார்க்கப்படுவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Popular

More like this
Related

பிபிசிக்கு எதிராக 10 பில்லியன் டொலர் இழப்பீடு கோரி அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் வழக்கு!

பிபிசி செய்திச் சேவையிடமிருந்து குறைந்தபட்சம் 10 பில்லியன் டொலர் இழப்பீடு கோரி...

மனிதாபிமானப் பணிக்குப் பின்னர் நாட்டிலிருந்து புறப்பட்ட ஜப்பானிய மருத்துவக் குழு!

புயல் தாக்கத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மருத்துவ உதவிகளை வழங்கும் நோக்கில் இலங்கை...

இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் (SLBC) நூற்றாண்டு விழா

நாட்டின் முதன்மை இலத்திரனியல் ஊடகத் தொடர்பாடல் நிறுவனமாகக் கருதப்படும் இலங்கை ஒலிபரப்புக்...

இந்திய நிதியுதவியின் கீழ் மலையகத்தின் 24 குடும்பங்களுக்கு புதிய வீடுகள்

லைன் அறைகளுக்கு பதிலாக தனி வீடுகளை வழங்கும் வேலைத்திட்டத்தின் கீழ் எல்கடுவ...