பாதாள உலகக் கும்பல்களால் மேற்கொள்ளப்படும் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் குறித்து மக்கள் அச்சமடையத் தேவையில்லை

Date:

நாட்டில் பாதாள உலக கும்பல்களால் தொடர்ந்து இடம்பெறும் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் குறித்து பொதுமக்கள் அச்சமடையத் தேவையில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நாட்டில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் பதிவாகி வருகின்றன.

இவ்வருடத்தின் இதுவரையான காலப்பகுதிக்குள் 18 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் பதிவாகியுள்ள நிலையில் அவற்றில் 12 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் பாதாள உலகக் கும்பல்களுடன் தொடர்புடையவை ஆகும்.

மேலும், 2023 ஆண்டில் 120 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் பதிவாகியுள்ள நிலையில் அவற்றில் 65 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் பாதாள உலகக் கும்பல்களுடன் தொடர்புடையவை என்பதுடன் 2024 ஆண்டில் 103 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் பதிவாகியுள்ள நிலையில் அவற்றில் 56 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் பாதாள உலகக் கும்பல்களுடன் தொடர்புடையவை ஆகும்.

பாதாள உலகக் கும்பலைச் சேர்ந்த “கணேமுல்ல சஞ்சீவ” என்பவர் கொழும்பு புதுக்கோட்டை நீதிமன்றத்துக்குள் வைத்து கடந்த 19 ஆம் திகதி சுட்டுக்கொல்லப்பட்டார்.

பழிவாங்கும் நோக்கத்தில் பாதாள உலகக் கும்பல்களால் தொடர்ந்து இடம்பெறும் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களினால் பொதுமக்கள் அச்சத்திற்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Popular

More like this
Related

கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கு: ‘தெமட்டகொட சமிந்த’விடம் வாக்குமூலம் பெற நீதிமன்றம் அனுமதி!

பாதாள உலகக் குழுவின் முக்கிய தலைவரான கணேமுல்ல சஞ்சீவ கொல்லப்பட்ட சம்பவம்...

கொவிட் காலத்தில் தன்னார்வத் தொண்டு செய்த இளைஞருக்கு இலவச ஹஜ் வாய்ப்பு.

கொவிட்-19 பெருந்தொற்று காலத்தில் உயிரிழந்தவர்களின் ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்யும் பணிகளில் தன்னார்வமாக...

சவூதி அரேபியா சென்றடைந்த இலங்கையின் முதல் ஹஜ் யாத்ரீகர்கள் குழு: தூதுவர் அமீர் அஜ்வத் வரவேற்பு.

2026-ஆம் ஆண்டுக்கான ஹஜ் கடமையை நிறைவேற்றுவதற்காக இலங்கையிலிருந்து புறப்பட்ட 325...

தமிழக சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற விஜய்க்கு நமல் ராஜபக்ஷ வாழ்த்து!

2026 தமிழக சட்டமன்றத் தேர்தலில் அமோக வெற்றியை பதிவு செய்தமைக்காக நடிகரும்,...