மத்திய வங்கியின் பெயரில் சமூக வலைத் தளங்களில் போலி விளம்பரங்கள்: அவதானத்துடன் செயற்படுமாறும் வேண்டுகோள்

Date:

இலங்கை மத்திய வங்கியின் பெயரைப் பயன்படுத்தி  சமூக வலைத் தளங்களில் போலியான விளம்பரங்கள் வெளியிடப்பட்டு வருவதாகவும் எனவே பொதுமக்களை அவதானத்துடன் செயற்படுமாறும் இலங்கை மத்திய வங்கி எச்சரிக்கை விடுத்துள்ளது.

இது குறித்து இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிவிப்பில் தாம் ” மத்திய வங்கியில் காணப்படும்  தொழில்வாய்ப்புக்கள் எதையும் மூன்றாம் தரப்பு தளங்களில் விளம்பரப்படுத்துவதில்லை எனவும்,  தமது  இணையத்தளத்தின் தொழிவாய்ப்புப் பிரிவின் கீழும் மத்திய வங்கியின் உத்தியோகபூர்வ சமூக வலைத்தளங்களிலும் மாத்திரமே இது தொடர்பான தகவல்களை  வெளியிடுவதாகவும் அறிவித்துள்ளது.

அத்துடன் இலங்கை மத்திய வங்கி சார்பில் ஆட்சேர்ப்புச் செய்வதற்கு வேறு வலைத்தளங்களுக்கோ  அல்லது தனிநபர்களுக்கோ  அதிகாரமளிக்கப்படவில்லை எனவும்  குறிப்பிட்டுள்ளது.

மேலும் https://www.cbsl.gov.lk/en/careers என்ற உத்தியோகபூர்வ இலங்கை மத்திய வங்கியின் தொழில்வாய்ப்பு பக்கத்தினூடாக பரீட்சித்து விண்ணப்பிக்குமாறும்  அவதானத்துடன் செயற்படுமாறும்  இலங்கை மத்திய வங்கி பொது மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.

Popular

More like this
Related

களுத்துறையில் சில பகுதிகளுக்கு 12 மணிநேர நீர்வெட்டு

களுத்துறை மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு நாளை (05) 12 மணிநேர நீர்வெட்டு...

மட்டக்களப்பில் நடைபெற்ற முஸ்லிம் காங்கிரஸ் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான வதிவிட செயலமர்வு!

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான வதிவிட செயலமர்வு மட்டக்களப்பு,...

சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் அறிக்கைகளை சமர்ப்பிக்காத அதிகாரிகளுக்கு எதிராக வழக்குத் தாக்கல்!

2025 ஆம் ஆண்டுக்கான சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பான அறிக்கையினை சமர்ப்பிக்காத...