இறந்த உடலுக்கு அருகில் பல மணிநேரங்கள் கழித்த விமான பயணிகள்: மன்னிப்புக் கோரிய கத்தார் விமான சேவை

Date:

மெல்போர்னிலிருந்து கத்தார் விமான சேவையினூடாக தோஹா நோக்கி கணவன் மனைவி இருவர் பயணித்துக் கொண்டிருந்த நிலையில் சக பெண் பயணி ஒருவர் திடீரென இறந்துவிட்டார்.

இந்த பெண்ணின் உடலை வணிக வகுப்பு (Business Class) பகுதிக்கு மாற்ற விமான பணியாளர்கள் முயற்சித்தனர்.

எனினும் இறந்த பெண்ணின் உடல் பருமனாக இருந்ததனால் அது சாத்தியப்படவில்லை. இதன் காரணமாக அவ்வுடலை இக்கணவன் மனைவி பக்கத்திலேயே வைத்துவிட்டனர்.

விமானம் தரையிறங்கியதன் பின்னரும் கூட அம்பியூலன்ஸ் பணியாளர்கள் வரும் வரையில் இவ்விருவரும் இந்த உடலக்கு அருகில் காத்திருக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது.

இச்சம்பவமானது தமக்கு மிகுந்த வேதனைகளையும் மன உளைச்சலையும் தந்ததாக இவ்விருவரும் தெரிவித்தனர்.

அதேவேளை இந்த சம்பவத்தில் ஏற்பட்ட அனைத்து தவறுகளுக்கும் வருந்துவதாக காத்தார் விமான சேவை அறிவித்துள்ளது.

அல்ஹுர்ரா செய்திச் சேவை கத்தார்.

Popular

More like this
Related

பெரும்பான்மையை ஏற்றுக் கொண்டார் ஆளுநர்: த.வெ.க. தலைவர் விஜய் நாளை தமிழக முதல்வராக பதவியேற்கிறார்.

தமிழக வெற்றிக் கழகத்திற்கு காங்கிரஸ், இரண்டு இடது சாரிகள், விசிக, ஐ.யு.எம்.எல்....

ஐயூஎம்எல் ஆதரவு: தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!

தவெக ஆட்சியமைக்க இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி நிபந்தனையற்ற ஆதரவு...

அதிகரிக்கும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை

இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 9 லட்சத்திற்கும் அதிக சுற்றுலாப் பயணிகள்...

வியட்நாம் ஜனாதிபதியின் இலங்கை விஜயம் நிறைவு

இலங்கைக்கான அரச விஜயத்தை வெற்றிகரமாக நிறைவு செய்த வியட்நாம் சோசலிசக் குடியரசின்...