புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்தியா கொலை வழக்கில் மரண தண்டனை நியமிக்கப்பட்ட கைதிகளில் ஒருவரான பூபாலசிங்கம் ஜெயக்குமார் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
யாழ் சிறையில் தண்டனை அனுபவித்து வந்த அவர் நேற்றிரவு சிறைச்சாலை கூண்டியல் தற்கொலை செய்துகொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது. கடந்த 2015ம் ஆண்டு மாணி வித்தியா பாலியல் வன்புணர்விற்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டார்.
இது தொடர்பான வழக்கு விசாரணைகள் இடம்பெற்று வந்த நிலையில் கடந்த 2017ம் ஆண்டு யாழ் மேல் நீதிமன்றம் 7 பேருக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.
குறித்த தண்டனைக்கு எதிரான மேன்முறையீடு செய்திருந்த போதிலும் அண்மையில் மேன்முறையீட்டு நீதிமன்றம் தண்டனையை உறுதி செய்தமை குறிப்பிடத்தக்கது.
