நாளை நாடு தழுவிய ரீதியில் சுகாதார ஊழியர்கள் பணி பகிஷ்கரிப்பு

Date:

நாளை (18) காலை 07.00 மணி முதல் 24 மணி நேரம் பணிப்புறக்கணிப்பு நடத்த சுகாதாரத்துறை தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது.

நிதி அமைச்சுடனான கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த சங்கத்தின் தலைவர் ரவி குமுதேஷ் இதனைத் தெரிவித்தார்.

சுகாதாரத்துறை தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு பிரதிநிதிகள் மற்றும் நிதியமைச்சின் அதிகாரிகளுக்கு இடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தை தோல்வியடைந்த நிலையில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி, நாடு தழுவிய ரீதியில் உள்ள அனைத்து வைத்தியசாலைகளிலும் நிறைவுகாண் மருத்துவ நிபுணர்கள், மருத்துவ உதவியாளர்கள் உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் 24 மணி நேர பணிபகிஷ்கரிப்பில் ஈடுபட உள்ளன.

மேலும், நோயாளர்களின் நலன் கருதி அவசர மற்றும் அத்தியாவசிய சேவைகளின் போது சுகாதார ஊழியர்கள் கடமையில் ஈடுபட தயாராக உள்ளனர்.

இதேவேளை சிறுவர் வைத்தியசாலை, புற்றுநோய் வைத்தியசாலை, மகப்பேறு வைத்தியசாலை மற்றும் சிறுநீரக வைத்தியசாலை உள்ளிட்ட விசேட தேவையுடைய வைத்தியசாலைகளில் எவ்வித தொழிற்சங்க நடவடிக்கையும் முன்னெடுக்கப்பட மாட்டாது என்றும் முன்னதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

மாலைதீவில் பணியை தமது ஆரம்பித்த ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்

ஸ்ரீ லங்கன் ஏர்லைன்ஸ் விமான சேவையானது மாலைத்தீவின் மாலேவில் உள்ள வேலானா...

பாராளுமன்ற அலுவல்கள் குழுவிற்கு நீண்ட விடுமுறை

சபாநாயகரின் அனுமதியுடன்பாராளுமன்ற ஊழியர்களுக்கு டிசம்பர் 22 மற்றும் 23 ஆம் திகதிகளில்...

Operation Hawkeye Strike: சிரியாவில் உள்ள ISIS இலக்குகள் மீது அமெரிக்கா வான்வழித் தாக்குதல்.

சிரியாவில், ஐஎஸ்ஐஎஸ் இலக்குகளைக் குறிவைத்து அமெரிக்கா வான்வழித் தாக்குதல் நடத்தியுள்ளது. சிரியாவின், மத்திய...

இலங்கையின் டிஜிட்டல் மயமாக்கலுக்கு உலக வங்கி நிதியுதவி

இலங்கையின் டிஜிட்டல் மயமாக்கலுக்கு ஆதரவளிக்கும் வகையில் 50 மில்லியன் டொலர் திட்டத்திற்கு...