மீண்டும் ஹமாஸை அச்சுறுத்தும் ட்ரம்ப்..!

Date:

3 கட்டங்களாக யுத்த நிறுத்தம் இடம்பெற வேண்டும் என்ற உடன்பாட்டை அலட்சியம் செய்து மிகவும் கடுமையான தொனியில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஹமாஸை எச்சரித்துள்ளார்.

உடனடியாக பணயக் கைதிகளையும் இறந்த உடல்களையும் விடுவிக்கவேண்டும், பணயக் கைதிகள் விடுதலை செய்யப்படா விட்டால் நரகத்திற்கான விலையை செலுத்தவேண்டியிருக்கும்  என்பதே அந்த எச்சரிக்கையாகும்.

நான் கூறுவதை ஹமாஸ் நிறைவேற்றவில்லை என்றால் ஹமாஸின் எந்த உறுப்பினரும் பாதுகாப்பாக இருக்க முடியாது என்று தெரிவித்தார்.

இதேவேளை இஸ்ரேல் தரப்பில் நிவாரணங்கள் வரவிடாமல் தடுக்கும் வகையில் எல்லைகளை மூடி மின்சாரம், தண்ணீர் போன்றவைகளை தடைசெய்து மக்களை பட்டினியில் போட்டு துன்புறுத்தும் நடவடிக்கையை இஸ்ரேல் மேற்கொண்டுள்ளது.

இது தொடர்பாக ஹமாஸ் பின்வருமாறு கூறியுள்ளது,

உடன்படிக்கை நிபந்தனைகளை பின்பற்றுவோம், மத்தியஸ்தர்கள் இதனை நிறைவேற்றுவார்கள், இஸ்ரேல் தனது தரப்பு வாக்குறுதிகளை நிறைவேற்றட்டும் உடனடியாக 2ஆம் கட்ட பேச்சுவார்த்தைகளை தொடங்கி தனது படையை முழுமையாக வெளியேற்றிக்கொள்ள வேண்டும் எனவும் கூறியுள்ளது.

(anadolu agency)

Popular

More like this
Related

தாயைக் கொன்ற சவூதியர் உட்பட 8 பேருக்கு ஒரே நாளில் மரண தண்டனை!

சவூதி அரேபியாவில் ஒரே நாளில் எட்டு பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது....

தன்னைப் போலவே தன் சந்ததியையும் இலட்சியத்துக்காக உருவாக்க விரும்பிய ஊடகவியலாளர் அனஸ் அல்சரீப்!

இஸ்ரேலின் தாக்குதலில் உயிரிழந்த பாலஸ்தீன பத்திரிகையாளர் அனஸ் சரீபின் மனைவி, தங்கள்...

ஊடகக் குரல்களை அடக்குவது பாலஸ்தீன “இனப்படுகொலை” யின் யதார்த்தங்களை மறைக்கும் பரந்த முயற்சியின் ஒரு பகுதியாகும் – இலங்கை சுதந்திர ஊடக இயக்கம் கண்டனம்

காசா மோதலின் போது ஊடகவியலாளர்கள் கொல்லப்படுவதையும் பலஸ்தீனக் குரல்கள் அடக்கப்படுவதையும் இலங்கையின்...

இராணுவ புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளராக மேஜர் ஜெனரல் மஜீத் நியமனம்

இராணுவ புலனாய்வு படையணியின் புதிய கட்டளைத் தளபதியாக சிரேஷ்ட இராணுவ அதிகாரி...