மீண்டும் ஹமாஸை அச்சுறுத்தும் ட்ரம்ப்..!

Date:

3 கட்டங்களாக யுத்த நிறுத்தம் இடம்பெற வேண்டும் என்ற உடன்பாட்டை அலட்சியம் செய்து மிகவும் கடுமையான தொனியில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஹமாஸை எச்சரித்துள்ளார்.

உடனடியாக பணயக் கைதிகளையும் இறந்த உடல்களையும் விடுவிக்கவேண்டும், பணயக் கைதிகள் விடுதலை செய்யப்படா விட்டால் நரகத்திற்கான விலையை செலுத்தவேண்டியிருக்கும்  என்பதே அந்த எச்சரிக்கையாகும்.

நான் கூறுவதை ஹமாஸ் நிறைவேற்றவில்லை என்றால் ஹமாஸின் எந்த உறுப்பினரும் பாதுகாப்பாக இருக்க முடியாது என்று தெரிவித்தார்.

இதேவேளை இஸ்ரேல் தரப்பில் நிவாரணங்கள் வரவிடாமல் தடுக்கும் வகையில் எல்லைகளை மூடி மின்சாரம், தண்ணீர் போன்றவைகளை தடைசெய்து மக்களை பட்டினியில் போட்டு துன்புறுத்தும் நடவடிக்கையை இஸ்ரேல் மேற்கொண்டுள்ளது.

இது தொடர்பாக ஹமாஸ் பின்வருமாறு கூறியுள்ளது,

உடன்படிக்கை நிபந்தனைகளை பின்பற்றுவோம், மத்தியஸ்தர்கள் இதனை நிறைவேற்றுவார்கள், இஸ்ரேல் தனது தரப்பு வாக்குறுதிகளை நிறைவேற்றட்டும் உடனடியாக 2ஆம் கட்ட பேச்சுவார்த்தைகளை தொடங்கி தனது படையை முழுமையாக வெளியேற்றிக்கொள்ள வேண்டும் எனவும் கூறியுள்ளது.

(anadolu agency)

Popular

More like this
Related

இன்று முதல் முச்சக்கர வண்டி கட்டணங்களில் மாற்றம்

ஒரு கிலோ மீட்டருக்கான முச்சக்கர வண்டி கட்டணத்தை 10 ரூபாவினால் அதிகரிப்பதற்கு...

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் அநீதியான கைது: உச்ச நீதிமன்றத்தில் மாவனல்லை இளைஞருக்குக் கிடைத்த நீதி.

மாவனல்லைப் பகுதியைச் சேர்ந்த 21 வயதுடைய முகமது ரிஃபாய் முகமது சுஹைல்...

பாண் உள்ளிட்ட பேக்கரி உற்பத்திப் பொருட்களின் விலை உயர்வு!

இன்று நள்ளிரவு முதல் 450 கிராம் எடையுள்ள ஒரு இறாத்தல் பாணின்...

பாகிஸ்தானின் 86-வது தேசிய தினம்: இலங்கையில் விமரிசையான கொண்டாட்டம்!

இலங்கையில் வாழும் பாகிஸ்தானிய சமூகம் மற்றும் இலங்கையிலுள்ள பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயம் பாகிஸ்தானின்...