இம்தியாஸ் தான் தவிசாளர்: இராஜினாமா ஏற்கப்படவில்லை: ஜ.ம.சசெயலாளர்

Date:

இம்தியாஸ் பாக்கீர் மாக்கர் அவர்களின் இராஜினாமா கடிதத்தை கட்சி ஏற்கவில்லை என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் நேற்று (19) நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

‘இம்தியாஸ் பாக்கீர் மக்கார் சிரேஷ்ட தலைவர் அவர் பதவி விலகல் கடிதத்தை வழங்கியுள்ளார். காரணம் குறிப்பிடப்படவில்லை. அவரைபோன்ற சிரேஷ்ட தலைவர் ஒருவர் எமது கட்சியில் இருக்க வேண்டும். எனவே, இராஜினாமா கடிதம் ஏற்கப்படவில்லை எனவம் அவர் தெரிவித்தார்.

மேலும் எமது கட்சிக்குள் பிரச்சினை இல்லை, கட்சி பிளவுபடாது. பதவி விலகல் கடிதம் ஏற்கப்படவில்லை என்பதால் அவரே தற்போதைய தவிசாளர், அவருடன் நான் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளேன் எனவும் ரஞ்சித் மத்தும தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம் இம்தியாஸ் பாக்கீர் மாக்கார் அனைத்து பதவிகளிலிருந்தும் இராஜினாமா செய்திருந்தார்.

கட்சியின் மறுசீரமைப்பு மற்றும் எதிர்கால திசைக்கான 11 பக்கங்களுக்கு மேல் முன்மொழிவுகளையும், அதை நினைவூட்டும் நான்கு பக்க கடிதங்களையும் இதற்கு முன்பு இரண்டு சந்தர்ப்பங்களில் எழுதியிருந்த இம்தியாஸ் பாக்கீர் மார்க்கர், தனது இராஜினாமா கடிதத்தை எதிர்க்கட்சித் தலைவரின் செயலாளர் சுரங்க ரணசிங்கவிடம் ஒப்படைத்திருந்தார்.

Popular

More like this
Related

திரைப்பட கூட்டுத்தாபனத்தை மாற்றியமைக்க திட்டம்: அமைச்சரவை அனுமதி

இலங்கை திரைப்படக் கூட்டுத்தாபனத்தின் சட்டத்தை நீக்கி புதிய சட்டத்தை அறிமுகப்படுத்த அமைச்சரவை...

இலங்கையில் முதன்முறையாக உலக கெரடோகோனஸ்  தினம் அனுஷ்டிப்பு.

உலக கெரடோகோனஸ் தினம் (World Keratoconus Day ) ஒவ்வொரு ஆண்டும்...

இலங்கை மேசைப் பந்து விளையாட்டு வரலாற்றில் தாவி சமரவீர புதிய மைல்கல்

11 வயதிற்குட்பட்ட உலக மேசைப் பந்து தரவரிசையில் இலங்கையைச் சேர்ந்த தாவி...

டெல்லி கார் குண்டு வெடிப்பு: 13 பேர் கொல்லப்பட்டதையடுத்து பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் அமுலில்.

டெல்லியின் வரலாற்றுச் சிறப்புமிக்க செங்கோட்டைப் பகுதிக்கு அருகே இன்று நடந்த சக்திவாய்ந்த...