உள்ளூராட்சி தேர்தலுக்கான வேட்புமனுக்களை ஏற்கும் பணிகள் இன்றுடன் நிறைவு!

Date:

எதிர்வரும் உள்ளூராட்சி சபை தேர்தலுக்கான வேட்புமனுக்களை ஏற்றுக் கொள்ளும் நடவடிக்கை இன்றுடன் (20) நிறைவடையவுள்ளது.

இன்று நண்பகல் 12.00 மணிக்கு பின்னர் வேட்புமனுக்கள் எந்தக் காரணம் கொண்டும் ஏற்றுக்கொள்ளப்படாது என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

வேட்புமனுக்களை ஏற்றுக் கொள்ளும் நடவடிக்கை நிறைவடைந்ததும் இன்று நண்பகல் 12.00 மணி முதல் ஆட்சேபனைகளைத் தெரிவிக்க ஒன்றரை மணி நேரம் அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாகவும் தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

336 உள்ளூராட்சி மன்றங்களுக்கான வேட்புமனுக்களை ஏற்கும் நடவடிக்கை கடந்த 17 ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்பட்டது.

வேட்புமனுக்கள் ஏற்றுக் கொள்ளும் பணிகள் நிறைவடைந்ததும் தேர்தலுக்கான திகதி அறிவிக்கப்படும்.

இதேவேளை, உள்ளூராட்சி சபை தேர்தல் தொடர்பான கட்டுப்பண நடவடிக்கைகளும் நேற்று (19) நிறைவடைந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

மத மற்றும் கலாசார விவகாரங்களுக்கான புதிய பிரதி அமைச்சராக முனீர் முலஃபர் கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்

மத மற்றும் கலாச்சார விவகாரங்களுக்கான புதிய பிரதி அமைச்சராக  முனீர் முலாஃபர்...

பாலின சமத்துவத்தை முழுமையாக அடைய தொடர்ச்சியான அர்ப்பணிப்பு தேவை: பிரதமர்

பெண்கள் மற்றும் பெண் பிள்ளைகளின் உரிமைகள் மற்றும் நல்வாழ்வை முன்னேற்றுவதற்கும், சமத்துவம்...

கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் நீடிப்பு: கல்வியமைச்சு

நடைமுறைப்படுத்தப்படவுள்ள கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் பிற்பகல் 2 மணி...

கல்கிஸ்ஸை சட்டத்தரணி தாக்குதல் சம்பவம்; பொலிஸ் அதிகாரிக்கு பிணை

கல்கிஸ்ஸை நீதிமன்ற வளாகத்திற்குள் பொலிஸ் அதிகாரியொருவர் சட்டத்தரணியொருவரைத் தாக்கிய சம்பவம் தொடர்பாக...