எரிபொருள் விநியோகஸ்தர்களினால் ஜனாதிபதிக்கு கையளிக்கப்பட்ட மனு..!

Date:

எரிபொருள் விநியோகத்தில் விநியோகஸ்தர்களுக்கு வழங்கப்படும் 3% தள்ளுபடியை ரத்து செய்ய இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் (CPC) எடுத்த முடிவால் எழுந்துள்ள பிரச்சினையை தீர்க்கும் முயற்சியாக மனுவொன்று கையளிக்கப்பட்டுள்ளது.

குறித்த மனுவானது, எரிபொருள் விநியோக சங்க பிரதிநிதிகள் குழு ஒன்றினால் இன்று (03) ஜனாதிபதி செயலகத்தில் சமர்பிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, ஜனாதிபதி செயலகத்தில் உள்ள மூத்த அதிகாரி ஒருவரிடம் பேசிய எரிபொருள் விநியோக சங்க பிரதிநிதிகள், இந்த விவகாரத்தை ஜனாதிபதியிடம் எடுத்துரைத்து நியாயமான தீர்வை வழங்குமாறும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதற்கு முன்னதாகவும் பல அதிகாரிகளிடம் மனுக்கள் கொடுக்கப்பட்டுள்ளதாகவும், தங்கள் மனுவை ஜனாதிபதியிடம் ஒப்படைக்கவும், இந்த விவகாரத்தைத் தீர்க்க எரிபொருள் வணிக சங்கங்களின் சில பிரதிநிதிகளுடன் கலந்துரையாடலுக்கான ஏற்பாடுகளைச் செய்யவும் அவர்கள் கோரியுள்ளனர்.

மேலும், சீன பெட்ரோலியம் மற்றும் கெமிக்கல் கார்ப்பரேஷன் (சினோபெக்) மற்றும் இந்தியன் எண்ணெய் நிறுவனம் (ஐஓசி) ஆகியவை எரிபொருள் விநியோகத்திற்காக தங்களுடன் இணைந்து பணியாற்ற ஆர்வமாக உள்ளதாகவும் விநியோகஸ்தர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

 

Popular

More like this
Related

நிதி மோசடி குற்றச்சாட்டில் குடிவரவு, குடியகல்வுத் திணைக்கள அதிகாரி கைது!

அதிகாரப்பூர்வ மென்பொருள் நிறுவலுடன் தொடர்புடைய நிதி மோசடி குற்றச்சாட்டின் கீழ், குடிவரவு...

மோசமான வானிலையால் 1,113 குடும்பங்களைச் சேர்ந்த 3,475 பேர் பாதிப்பு!

இலங்கையில் நிலவும் மோசமான வானிலை காரணமாக ஏழு மாவட்டங்களில் உள்ள 1,113...

நாட்டின் பல மாவட்டங்களுக்கு II ஆம் கட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை!

தற்போது நிலவும் கடும் மழைக்கால வானிலை காரணமாக, நாட்டின் பல பகுதிகளுக்கு...

சுங்கத் திணைக்களம் 1 டிரில்லியன் ரூபாய் வருமான இலக்கை எட்டியது!

2026 ஆம் ஆண்டிற்கான ஒரு டிரில்லியன் ரூபாய் வருமான இலக்கை நேற்று முன்தினம் எட்டியுள்ளதாக...