மாத்தளை மாவட்டத்திலுள்ள கலேவல பிரதேச சபைக்கு ஜேர்மனி நாட்டைச் சேர்ந்த ஒரு பெண் சுயேச்சைக் குழுவின் சார்பில் வேட்பாளராகப் போட்டியிட உள்ளார்.
இதற்காக, அவர் தேர்தல் கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளார்.
அந்தப் பெண் இலங்கை குடியுரிமையை பெற்றுள்ளதாகவும், உள்ளூராட்சி தேர்தலில் போட்டியிடுவதற்கான அனைத்து சட்டத்துவ நிபந்தனைகளையும் பூர்த்தி செய்துள்ளதாகவும் குறிப்பிடப்படுகிறது.
கட்டுப்பணம் செலுத்திய பின்னர், ஊடகங்களுடன் கருத்து வெளியிடுகையில்.
இலங்கையில் மாற்றங்களை ஏற்படுத்தும் உறுதியுடனும், பொதுமக்களின் சேவைக்காகவும் தான் இந்த அரசியல் பயணத்தைத் தொடங்கியிருப்பதாக கூறியுள்ளார்.