சவூதி,கத்தார், துபாய் உள்ளிட்ட நாடுகளில் ரமழான் நோன்பு இன்று ஆரம்பம்..

Date:

சவூதி அரேபியா, கத்தார், துபாய், இந்தோனேசியா, குவைத், பஹ்ரைன் மற்றும் அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளில், நேற்று (28) மாலை ரமழான் பிறை தென்பட்டதால், இன்று (01) புனித நோன்பு ஆரம்பமாகி உள்ளது.

இதேவேளை, இலங்கை, இந்தியா, மலேசியா, சிங்கப்பூர், புரூனை, ஜப்பான், கொரியா, பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளில் நாளை (02) ஞாயிற்றுக்கிழமை, புனித நோன்பு ஆரம்பமாகும் என, சர்வதேச ஊடகங்கள் அறிவித்துள்ளன.

பிறை தெரிந்ததையடுத்து, சவூதி அரேபியா உள்ளிட்ட வளைகுடா நாடுகளில் உள்ள இஸ்லாமிய மக்கள் நேற்று இரவு முதல் தங்கள் தராவீஹ் தொழுகையைத் தொடங்கியுள்ளனர்.

இன்று மார்ச் 1 ஆம் தேதி (சனிக்கிழமை) முதல் நோன்பு கடைப்பிடிக்கவுள்ளனர். நேற்று இரவு முதல் ரமழான் புனித மாதம் தொடங்கும் என்பதை அங்குள்ள மத தலைவர்கள் உறுதி செய்தனர்.

( ஐ.ஏ. காதிர்கான் )

Popular

More like this
Related

தேசப் பற்றுக்கு நபிகளார் ஒரு குறியீடு: சுதந்திர தின விசேட கட்டுரை!

முஹம்மத் பகீஹுத்தீன் பிறந்த மண்ணையும் தேசத்தையும் நேசிப்பது மனிதனிடம் உள்ள ஒரு இயற்கையான...

இனவாதம் மற்றும் மதவாதம் அற்ற சமத்துவ சமூகமே எமது இலக்கு: பிரதமர் உறுதி.

78 ஆவது தேசிய சுதந்திர தினத்தை ஒரு புதிய சுதந்திரம் குறித்த...

பேரண்டப் பொருளாதார நன்மைகள் அனைத்து இன மக்களையும் சென்றடைய வேண்டும் – ஜனாதிபதி அநுர

கடந்த நூற்றாண்டில் தவறவிட்ட வெற்றிகளை நாட்டுக்குப் பெற்றுக்கொடுத்து, அனைவரினதும் கனவான, ‘வளமான...

புதிய கணக்காய்வாளர் நாயகமாக சமுதிகா ஜயரத்ன

சிரேஷ்ட பிரதி கணக்காய்வாளர் நாயகமாகப் பணியாற்றும் எல்.எஸ்.ஐ. ஜயரத்னவை புதிய கணக்காய்வாளர்...