சவூதி,கத்தார், துபாய் உள்ளிட்ட நாடுகளில் ரமழான் நோன்பு இன்று ஆரம்பம்..

Date:

சவூதி அரேபியா, கத்தார், துபாய், இந்தோனேசியா, குவைத், பஹ்ரைன் மற்றும் அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளில், நேற்று (28) மாலை ரமழான் பிறை தென்பட்டதால், இன்று (01) புனித நோன்பு ஆரம்பமாகி உள்ளது.

இதேவேளை, இலங்கை, இந்தியா, மலேசியா, சிங்கப்பூர், புரூனை, ஜப்பான், கொரியா, பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளில் நாளை (02) ஞாயிற்றுக்கிழமை, புனித நோன்பு ஆரம்பமாகும் என, சர்வதேச ஊடகங்கள் அறிவித்துள்ளன.

பிறை தெரிந்ததையடுத்து, சவூதி அரேபியா உள்ளிட்ட வளைகுடா நாடுகளில் உள்ள இஸ்லாமிய மக்கள் நேற்று இரவு முதல் தங்கள் தராவீஹ் தொழுகையைத் தொடங்கியுள்ளனர்.

இன்று மார்ச் 1 ஆம் தேதி (சனிக்கிழமை) முதல் நோன்பு கடைப்பிடிக்கவுள்ளனர். நேற்று இரவு முதல் ரமழான் புனித மாதம் தொடங்கும் என்பதை அங்குள்ள மத தலைவர்கள் உறுதி செய்தனர்.

( ஐ.ஏ. காதிர்கான் )

Popular

More like this
Related

மாகாண சபைத் தேர்தல் இந்த வருடத்திற்குள் நிச்சயமாக நடத்தப்படும்

மாகாண சபைத் தேர்தலை நடத்துவது குறித்து அரசாங்கத்தின் தற்போதைய நிலைப்பாட்டை விஞ்ஞான...

களு கங்கையை அண்மித்த பகுதிகளில் சிறிய அளவிலான வெள்ள அபாய எச்சரிக்கை

களு கங்கை வடிநிலப்பகுதியில் உள்ள நீர்மானி நிலையங்களின் நீர்மட்ட ஆய்வுகளின்படி, அடுத்த...

மோசமான வானிலை; உயிரிழப்பு எண்ணிக்கை 2 ஆக உயர்வு!

நாடு முழுவதும் உள்ள பல மாவட்டங்களைப் பாதித்த பேரிடர் சூழ்நிலையின் விளைவாக,...

சர்வதேச கொடுக்கல் வாங்கல்களை எளிதாக்கும் PayPal இன்று முதல் இலங்கையிலும் அறிமுகம்

டிஜிட்டல் பொருளாதாரத்தில் புதிய புரட்சியை ஏற்படுத்தும் வகையில், PayPal பணப்பரிமாற்ற முறை இன்று (15)...