இலங்கைக்கான சவூதி அரேபிய தூதுவரின் பெருநாள் வாழ்த்துச் செய்தி

Date:

இந்த அருள் நிறைந்த ஈத்அல் பித்ர் திருநாளில் இலங்கை அரசாங்கத்துக்கும் அதன் மக்களுக்கும் என் மனமார்ந்த நல்வாழ்த்துகளை தெரிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறேன் என இலங்கைக்கான சவூதி அரேபிய தூதுவர் காலித் ஹமூத் அல்கஹ்தானி தெரிவித்தார்.

புனித ரமழானை முன்னிட்டு இலங்கைக்கான சவூதி அரேபிய தூதுவர் வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:

இந்த புனித நாளானது நம் அனைவருக்கும் புதிய ஆரம்பங்கள், உற்சாகம் மற்றும் அன்பை பரப்புவதற்கான ஒரு சிறந்த வாய்ப்பாகும். இந்நாளில் உங்கள் எல்லோருடனும் என் மகிழ்ச்சியையும் அன்பையும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.

நாம் அனைவரும் எதிர்காலத்தில் மகிழ்ச்சி, ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வு பெற்று, எங்கள் இரு நாடுகளுக்கும் இடையிலான நட்பு மற்றும் ஒத்துழைப்பின் பிணைப்புகள் மேலும் வலுவடையட்டும் என இறைவனை பிரார்த்தித்துக்கொள்கிறேன்.

சவூதி அரேபியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான உறவுகளை மேலும் வலுப்படுத்தி, அந்த ஒத்துழைப்பு இரு நாடுகளின் நன்மைக்கும் செழிப்புக்கும் வழிவகுப்பதாக அமையட்டும் என்ற நம்பிக்கையுடன் பிரார்த்திக்கொள்கிறேன்.

Popular

More like this
Related

உயர்தரப் பரீட்சை வினாத்தாள் கசிவு தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த சிஐடி!

நடைபெற்று வரும் 2025 கல்விப் பொதுத் தராதரப் பரீட்சையின் பொருளியல் வினாத்தாள்...

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிப்பு.

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக...

பாராளுமன்ற பெண் ஊழியருக்கு பாலியல் துஷ்பிரயோகம் இடம்பெறவில்லை: குழுவின் அறிக்கை கையளிப்பு

பாராளுமன்றத்தின் பெண் பணியாளர் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளாரா என்பது குறித்து...

இலங்கையின் ஏற்றுமதி 14 பில்லியன் டொலர்களை எட்டியது!

2025 ஆம் ஆண்டின் முதல் பத்து மாதங்களில் நாட்டின் மொத்த ஏற்றுமதிகள்...