மத்தியக் கிழக்கில் நிரந்தர சமாதானத்திற்காக உழைக்கிறோம்: வெள்ளை மாளிகை இப்தாரில் ட்ரம்ப்

Date:

மத்திய கிழக்கு நாடுகளில் அமைதியை ஏற்படுத்த  முயன்று வருகிறோம் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் அமெரிக்க முஸ்லிம்களையும் அதேபோன்று அந்நாட்டிலுள்ள அரபு நாட்டு தூதுவர்களையும் அழைத்து நடாத்திய இப்தார் நிகழ்விலேயே இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

காசாவிலும் யெமனிலும் கடுமையான தாக்குதல் நடந்துகொண்டிருக்கின்ற சூழ்நிலையில் இவ்வாறானதொரு இப்தார் நிகழ்வை முஸ்லிம்களின் கடும் விமர்சனத்துடன் நடத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் உரையாற்றிய ட்ரம்ப்,

நான் எப்போதும் முஸ்லிம்களின் பக்கமே இருக்க விரும்புவதாகவும் அமெரிக்க தேர்தலில் தனக்கு சார்பாக வாக்களித்தமைக்காக எப்போதும் அவர்களுடைய நலனை கவனிக்க விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் மத்திய கிழக்கு பகுதியில் அமைதியை நிலைநாட்ட எனது தலைமையிலான அரசு தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டது. அப்போது, இஸ்ரேல் மற்றும் ஐக்கிய அரபு நாடுகளில் உள்ள சில முஸ்லிம் நாடுகளுக்கு இடையே, வரலாற்று சிறப்பு மிக்க ஆபிரகாம் உடன்படிக்கை சாத்தியமில்லாதது என்று அனைவரும் கூறினர். ஆனால், நாம் அதனை சாத்தியப்படுத்தினோம்.

முஸ்லிம் நண்பர்களுடன் இணைந்து பணியாற்றி, ஒளிமயமான, நம்பிக்கையான எதிர்காலத்தை உருவாக்க முடியும். உலகம் முழுவதும் அமைதியையே அனைவரும் விரும்புகிறோம், தேர்தலின் போது தன்னை ஆதரித்த இலட்சக்கணக்கான அமெரிக்க முஸ்லிம்களுக்கு நன்றி.

தேர்தலின் போது எங்களுடன் இருந்ததால், உங்களுடன் நான் இருக்க விரும்புகிறேன். இஸ்லாமிய சமூகத்திற்கு அளித்த வாக்குறுதிகளை நாங்கள் நிறைவேற்றி வருகிறோம். அவர்கள் எங்களுக்கு அளித்த ஆதரவிற்கு மத்திய கிழக்கு நாடுகளில் அமைதியை ஏற்படுத்தவும் முயன்று வருகிறோம்” என்றார்.

Popular

More like this
Related

நாட்டில் சில இடங்களில் ஓரளவு பலத்த மழை பெய்யலாம்

வடக்கு, கிழக்கு, வடமத்திய, மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களின் பல...

சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் ஹிஜாப் விவகாரம் தொடர்பில் ரிஷாத் பதியுதீன் அமைச்சருக்கு கடிதம்!

திருகோணமலையில்  சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் அரசியலமைப்பு உரிமைகளைப் பாதுகாக்க...

காலாவதியான பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த முன்னணி பல்பொருள் அங்காடிக்கு அபராதம்

காலாவதியான உணவுப் பொருட்களை விற்பனை செய்ததாக குற்றத்தை ஒப்புக்கொண்டதால், முன்னணி பல்பொருள்...

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் கவனம் 

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் திறந்த பாராளுமன்ற...