மத்தியக் கிழக்கில் நிரந்தர சமாதானத்திற்காக உழைக்கிறோம்: வெள்ளை மாளிகை இப்தாரில் ட்ரம்ப்

Date:

மத்திய கிழக்கு நாடுகளில் அமைதியை ஏற்படுத்த  முயன்று வருகிறோம் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் அமெரிக்க முஸ்லிம்களையும் அதேபோன்று அந்நாட்டிலுள்ள அரபு நாட்டு தூதுவர்களையும் அழைத்து நடாத்திய இப்தார் நிகழ்விலேயே இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

காசாவிலும் யெமனிலும் கடுமையான தாக்குதல் நடந்துகொண்டிருக்கின்ற சூழ்நிலையில் இவ்வாறானதொரு இப்தார் நிகழ்வை முஸ்லிம்களின் கடும் விமர்சனத்துடன் நடத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் உரையாற்றிய ட்ரம்ப்,

நான் எப்போதும் முஸ்லிம்களின் பக்கமே இருக்க விரும்புவதாகவும் அமெரிக்க தேர்தலில் தனக்கு சார்பாக வாக்களித்தமைக்காக எப்போதும் அவர்களுடைய நலனை கவனிக்க விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் மத்திய கிழக்கு பகுதியில் அமைதியை நிலைநாட்ட எனது தலைமையிலான அரசு தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டது. அப்போது, இஸ்ரேல் மற்றும் ஐக்கிய அரபு நாடுகளில் உள்ள சில முஸ்லிம் நாடுகளுக்கு இடையே, வரலாற்று சிறப்பு மிக்க ஆபிரகாம் உடன்படிக்கை சாத்தியமில்லாதது என்று அனைவரும் கூறினர். ஆனால், நாம் அதனை சாத்தியப்படுத்தினோம்.

முஸ்லிம் நண்பர்களுடன் இணைந்து பணியாற்றி, ஒளிமயமான, நம்பிக்கையான எதிர்காலத்தை உருவாக்க முடியும். உலகம் முழுவதும் அமைதியையே அனைவரும் விரும்புகிறோம், தேர்தலின் போது தன்னை ஆதரித்த இலட்சக்கணக்கான அமெரிக்க முஸ்லிம்களுக்கு நன்றி.

தேர்தலின் போது எங்களுடன் இருந்ததால், உங்களுடன் நான் இருக்க விரும்புகிறேன். இஸ்லாமிய சமூகத்திற்கு அளித்த வாக்குறுதிகளை நாங்கள் நிறைவேற்றி வருகிறோம். அவர்கள் எங்களுக்கு அளித்த ஆதரவிற்கு மத்திய கிழக்கு நாடுகளில் அமைதியை ஏற்படுத்தவும் முயன்று வருகிறோம்” என்றார்.

Popular

More like this
Related

இனவாதம் மற்றும் மதவாதம் அற்ற சமத்துவ சமூகமே எமது இலக்கு: பிரதமர் உறுதி.

78 ஆவது தேசிய சுதந்திர தினத்தை ஒரு புதிய சுதந்திரம் குறித்த...

பேரண்டப் பொருளாதார நன்மைகள் அனைத்து இன மக்களையும் சென்றடைய வேண்டும் – ஜனாதிபதி அநுர

கடந்த நூற்றாண்டில் தவறவிட்ட வெற்றிகளை நாட்டுக்குப் பெற்றுக்கொடுத்து, அனைவரினதும் கனவான, ‘வளமான...

புதிய கணக்காய்வாளர் நாயகமாக சமுதிகா ஜயரத்ன

சிரேஷ்ட பிரதி கணக்காய்வாளர் நாயகமாகப் பணியாற்றும் எல்.எஸ்.ஐ. ஜயரத்னவை புதிய கணக்காய்வாளர்...

சிறுவர்களுக்கான அன்றாட துஆக்கள் மற்றும் ஒழுக்கங்கள்: மும்மொழிகளில் புதிய நூல் வெளியீடு!

பிள்ளைகள் அன்றாட வாழ்வில் ஓத வேண்டிய துஆக்கள் மற்றும் அவர்கள் கடைப்பிடிக்க...