தேசபந்து தென்னக்கோனுக்கு நாளை வரை விளக்கமறியல்!

Date:

முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோனை நாளை வியாழக்கிழமை (20) வரை விளக்கமறியலில் வைக்குமாறு மாத்தறை நீதவான் நீதிமன்றம் இன்று புதன்கிழமை (19) உத்தரவிட்டுள்ளது.

2023 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 13 ஆம் திகதி மாத்தறை வெலிகம பெலேன பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றின் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோனை கைது செய்து நீதிமன்றில் ஆஜர்படுத்துமாறு மாத்தறை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில், தன்னை கைது செய்யுமாறு பிறப்பிக்கப்பட்ட உத்தரை இரத்து செய்யுமாறு கோரி தேசபந்து தென்னக்கோனால் ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த ரிட் மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படாமல் மேல்முறையீட்டு நீதிமன்றினால் கடந்த 17 ஆம் திகதி நிராகரிக்கப்பட்டது.

இதனையடுத்து, தேசபந்து தென்னக்கோன் இன்றைய தினம் காலை மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் சரணடைந்த நிலையில், குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் வரை அவர் நீதிமன்ற சிறைக் கூண்டில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.

பின்னர் குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டதையடுத்து தேசபந்து தென்னக்கோனை வியாழக்கிழமை (20) வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Popular

More like this
Related

காசாவைக் கைப்பற்றும் இஸ்ரேலின் திட்டம் குறித்து இலங்கை ஆழ்ந்த கவலை!

காசா நகரத்தின் கட்டுப்பாட்டைக் கைப்பற்ற இஸ்ரேல் எடுத்த முடிவு குறித்து இலங்கை...

முன்னாள் முதலமைச்சருக்கு ரூ.77 இலட்சத்திற்கும் அதிக மேலதிக எரிபொருள்:கோபா குழுவில் அம்பலமான தகவல்

2014-2017 காலப்பகுதியில் சப்ரகமுவ மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சருக்கு அனுமதிக்கப்பட்ட எரிபொருள்...

பெரும்பாலான பகுதிகளில் சீரான வானிலை

இன்றையதினம் (09) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடக்கு மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி,...