தேசிய ஒருமைப்பாட்டிற்கும் மீள் நல்லிணக்கத்திற்குமான காரியாலயத்தின் (ONUR) புதிய பரிபாலன சபை அங்கத்தவர்கள் நியமனம்!

Date:

தேசிய ஒருமைப்பாட்டிற்கும் மீள் நல்லிணக்கத்திற்குமான காரியாலயத்தின் (ONUR) 01/2024ம் சட்ட ஏற்பாட்டிற்கமைய புதிய பரிபாலன சபை அங்கத்தவர்களை நியமிப்பதற்கான நியமனக் கடிதங்களை வழங்கி வைக்கும் நிகழ்வு நேற்று (14) நீதியமைச்சில் இடம்பெற்றது.

நீதியமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்காரவின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் சபையின் தலைவராக பேராசிரியர் வசந்தா செனவிரத்ன, வணக்கத்திற்குரிய ஓமரே புன்னஸிரீ தேரர் , அருட்தந்தை கிரேஸியன் காப்ரியேல் அன்டோனிடோ அருள்ராஜ் குரோஸ், பேராசிரியர் டபிள்யூ. ஏ.டீ. ஷேர்லி லால் கிரிகோரி விஜேசிங்க, பேராசிரியர் பரீனா ருஸைக்,  கலாநிதி மனோஜி ஹரிஸ் ஷந்தர, சுசித் அபேவிக்கிரம, ஹாஷிம் ஸாலிஹ் ஆகியோர் நியமனக் கடிதங்களை பெற்றுக் கொண்டனர்.

நிகழ்வில் தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்கத்திற்கான அலுவலகத்தின் தலைவர் கலாநிதி விஜித் ரோஹன் பெர்னாண்டோ அவர்களும்  நிறுவனத்தின் அதிகாரிகள் பலரும் கலந்து சிறப்பித்தனர்.

 

Popular

More like this
Related

பத்திரிகையாளர் பிரகீத் எக்னெலிகொட தொடர்பான வழக்கு மீண்டும் விசாரணைக்கு!

சட்டமா அதிபர் தாக்கல் செய்த முறைப்படியான குற்றப்பத்திரிகையைத் தொடர்ந்து, பத்திரிகையாளர் பிரகீத்...

பெரும்பான்மையை நிரூபிக்க விஜய்க்கு 14 நாட்கள் அவகாசம் !

தமிழக சட்டசபை தேர்தலில் தனிப்பெருங்கட்சியாக உருவெடுத்துள்ள நிலையில், ஆளுநர் ராஜேந்திர அர்லேகருக்கு...

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்று பிற்பகலில் மழை

அயன மண்டலங்களுக்கு இடையிலான ஒடுங்கும் வலயம் (வட அரைக் கோளத்திலிருந்தும் தென்...

கேரளத்தில் காங்கிரஸ் ஆட்சி:மக்களுக்கு ராகுல் நன்றி!

கேரளத்தில் காங்கிரஸ் கட்சியை வெற்றிபெற வைத்த மக்களுக்கு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர்...