முஸ்லிம் பரீட்சார்த்திகள்,உத்தியோகத்தர்களின் வசதிக்காக ஜும்ஆ தொழுகையை நேர காலத்துடன் முடிக்குமாறு திணைக்களம் அறிவுறுத்தல்!

Date:

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை – 2024 (2025) இன்று ஆரம்பமாகியுள்ள நிலையில்,  எதிர்வரும் 21 ஆம் திகதி வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகையை முஸ்லிம் பரீட்சார்த்திகள் மற்றும் பரீட்சை நிலைய முஸ்லிம் உத்தியோகத்தர்களின் வசதி கருதி நேர காலத்துடன் முடித்துக் கொள்ளுமாறு முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள்  திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.

21.03.2025 ஆம் திகதி வெள்ளிக்கிழமை விஞ்ஞான (34) பாட வினாத்தாள் பகுதி I  பி.ப. 2.00 மணி தொடக்கம் பி.ப. 3.00 மணி வரை நடைபெற உள்ளது.

அன்றைய தினம் ஜும்ஆ பிரசங்கமும் ஜும்ஆ தொழுகையும் நடைபெறுவதனால் ஜும்ஆ பிரசங்கத்தையும் ஜும்ஆ தொழுகையையும் முடியுமான வரை முஸ்லிம் பரீட்சார்த்திகளினதும் பரீட்சை நிலைய முஸ்லிம் உத்தியோகத்தர்களினதும் வசதி கருதி நேர காலத்துடன் முடித்துக் கொள்ளுமாறு  சகல பள்ளிவாசல் நிருவாக சபையினருக்கும் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

 

Popular

More like this
Related

5வது சவூதி ஊடக மன்றம் ரியாத் நகரில்: மன்னரின் அனுசரனையின் கீழ் உலக ஊடக மற்றும் தொழில்நுட்பத் துறையினர் ஒன்று கூடல்

எழுத்து- காலித் ரிஸ்வான் சவூதி அரேபியாவின் பரபரப்பான புதுமைகளின் தலைநகரான ரியாத் நகர்...

ஶ்ரீலங்கா ஜம்இய்யதுல் குர்ரா மற்றும் அல் மகாரிஉல் குர்ஆனிய்யா சங்கத்துக்கும் இடையே புரிந்துணர்வுஒப்பந்தம்!

கடந்த ஜூன் 20ஆம் திகதி மஸ்ஜிதுன் நபவியில் இடம்பெற்ற சந்திப்பின் போது...

சட்டவிரோதமாக சேவையை விட்டு வெளியேறிய 3,500க்கும் மேற்பட்ட ஆயுதப்படை வீரர்கள் கைது!

சட்டவிரோதமாக சேவையை விட்டு வெளியேறிய 3,500க்கும் மேற்பட்ட ஆயுதப்படை உறுப்பினர்கள் கைது...

‘வளர்ந்து வரும் சிறந்த கல்வி நிறுவனம்’ Amazon collegeக்கு மற்றுமொரு விருது.

உயர் கல்வித் துறையில் சுமார் 16 வருடங்களை நிறைவு செய்து வெற்றி...