முஸ்லிம் பரீட்சார்த்திகள்,உத்தியோகத்தர்களின் வசதிக்காக ஜும்ஆ தொழுகையை நேர காலத்துடன் முடிக்குமாறு திணைக்களம் அறிவுறுத்தல்!

Date:

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை – 2024 (2025) இன்று ஆரம்பமாகியுள்ள நிலையில்,  எதிர்வரும் 21 ஆம் திகதி வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகையை முஸ்லிம் பரீட்சார்த்திகள் மற்றும் பரீட்சை நிலைய முஸ்லிம் உத்தியோகத்தர்களின் வசதி கருதி நேர காலத்துடன் முடித்துக் கொள்ளுமாறு முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள்  திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.

21.03.2025 ஆம் திகதி வெள்ளிக்கிழமை விஞ்ஞான (34) பாட வினாத்தாள் பகுதி I  பி.ப. 2.00 மணி தொடக்கம் பி.ப. 3.00 மணி வரை நடைபெற உள்ளது.

அன்றைய தினம் ஜும்ஆ பிரசங்கமும் ஜும்ஆ தொழுகையும் நடைபெறுவதனால் ஜும்ஆ பிரசங்கத்தையும் ஜும்ஆ தொழுகையையும் முடியுமான வரை முஸ்லிம் பரீட்சார்த்திகளினதும் பரீட்சை நிலைய முஸ்லிம் உத்தியோகத்தர்களினதும் வசதி கருதி நேர காலத்துடன் முடித்துக் கொள்ளுமாறு  சகல பள்ளிவாசல் நிருவாக சபையினருக்கும் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

 

Popular

More like this
Related

ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு நன்றி தெரிவித்த ஜனாதிபதி அனுரகுமார!

நாடு முழுவதும் அண்மையில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவுகளால் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு...

நாட்டின் பல பகுதிகளில் மழையுடனான வானிலை

நாட்டின் பல பகுதிகளில் இன்றும் மழையுடனான வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல்...

சுகாதாரத் துறையில் தகவல் தொழில்நுட்ப பயன்பாடு குறித்து இந்திய–இலங்கை சுகாதார அமைச்சர்கள் இடையில் கலந்துரையாடல்

இந்தியாவின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணையமைச்சர் திருமதி அனுப்பிரியா படேலுடன்...

கம்பளை டவுன் ஜும்ஆ மஸ்ஜித்துக்கு ஹஜ் பயண முகவர் சங்கத்தினால் நிவாரணப் பொருட்கள் கையளிப்பு

நாட்டில் அண்மையில் ஏற்பட்ட பேரிடர் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை இயல்பு...